ரூ.15 கோடி. திருவள்ளுவர் கோவில் திருப்பணிக்கு செலவிடப்படும். புதிய அம்சங்கள் திட்டமிடப்பட்டுள்ளது.

மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் முழுமையான சீரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொறியியலாளர்கள் ஏற்கனவே பின்னணி வேலைகளைத் தொடங்கியுள்ளனர், மேலும் பெரிய அளவிலான சீரமைப்பு பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் தொடங்கும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு மயிலாப்பூர் டைம்ஸிடம் தெரிவித்தார்.

அமைச்சர், நகர மேயர், மயிலாப்பூர் எம்.எல்.ஏ மற்றும் மூத்த அதிகாரிகள் மே 9 அன்று கோவிலுக்கு வந்திருந்தனர், அங்கு அவர்களுக்கு திட்டங்கள் பற்றிய சுருக்கமான விளக்கத்தை வழங்கினர்.

கோயிலுக்குள் உள்ள அனைத்து மண்டபங்களும் கருங்கல் கொண்டு புனரமைக்கப்படும். பழமையான கிணறு சீரமைக்கப்படும். கோவில் வளாகம் முழுவதும் புதிதாக வர்ணம் பூசப்படும். மேலும் இதர சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதற்கு முன்பு கருணாநிதி முதல்வராக இருந்தபோது திருவள்ளுவர் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

“இது ஒரு பழமையான கோவில், இந்தக் கோயில் வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப் பெரிய திருப்பணியாக இது இருக்கும் என்றும், தற்போது நடைபெற்று வரும் சீரமைப்புப் பணியை கலைஞருக்கு அர்ப்பணிக்கிறோம் என்றும் அமைச்சர் கூறினார்.

செய்தி: எஸ் பிரபு

admin

Recent Posts

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

5 days ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

1 month ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 months ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 months ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 months ago