மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் முழுமையான சீரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொறியியலாளர்கள் ஏற்கனவே பின்னணி வேலைகளைத் தொடங்கியுள்ளனர், மேலும் பெரிய அளவிலான சீரமைப்பு பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் தொடங்கும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு மயிலாப்பூர் டைம்ஸிடம் தெரிவித்தார்.
அமைச்சர், நகர மேயர், மயிலாப்பூர் எம்.எல்.ஏ மற்றும் மூத்த அதிகாரிகள் மே 9 அன்று கோவிலுக்கு வந்திருந்தனர், அங்கு அவர்களுக்கு திட்டங்கள் பற்றிய சுருக்கமான விளக்கத்தை வழங்கினர்.
கோயிலுக்குள் உள்ள அனைத்து மண்டபங்களும் கருங்கல் கொண்டு புனரமைக்கப்படும். பழமையான கிணறு சீரமைக்கப்படும். கோவில் வளாகம் முழுவதும் புதிதாக வர்ணம் பூசப்படும். மேலும் இதர சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதற்கு முன்பு கருணாநிதி முதல்வராக இருந்தபோது திருவள்ளுவர் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
“இது ஒரு பழமையான கோவில், இந்தக் கோயில் வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப் பெரிய திருப்பணியாக இது இருக்கும் என்றும், தற்போது நடைபெற்று வரும் சீரமைப்புப் பணியை கலைஞருக்கு அர்ப்பணிக்கிறோம் என்றும் அமைச்சர் கூறினார்.
செய்தி: எஸ் பிரபு
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…