மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் முழுமையான சீரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொறியியலாளர்கள் ஏற்கனவே பின்னணி வேலைகளைத் தொடங்கியுள்ளனர், மேலும் பெரிய அளவிலான சீரமைப்பு பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் தொடங்கும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு மயிலாப்பூர் டைம்ஸிடம் தெரிவித்தார்.
அமைச்சர், நகர மேயர், மயிலாப்பூர் எம்.எல்.ஏ மற்றும் மூத்த அதிகாரிகள் மே 9 அன்று கோவிலுக்கு வந்திருந்தனர், அங்கு அவர்களுக்கு திட்டங்கள் பற்றிய சுருக்கமான விளக்கத்தை வழங்கினர்.
கோயிலுக்குள் உள்ள அனைத்து மண்டபங்களும் கருங்கல் கொண்டு புனரமைக்கப்படும். பழமையான கிணறு சீரமைக்கப்படும். கோவில் வளாகம் முழுவதும் புதிதாக வர்ணம் பூசப்படும். மேலும் இதர சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதற்கு முன்பு கருணாநிதி முதல்வராக இருந்தபோது திருவள்ளுவர் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
“இது ஒரு பழமையான கோவில், இந்தக் கோயில் வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப் பெரிய திருப்பணியாக இது இருக்கும் என்றும், தற்போது நடைபெற்று வரும் சீரமைப்புப் பணியை கலைஞருக்கு அர்ப்பணிக்கிறோம் என்றும் அமைச்சர் கூறினார்.
செய்தி: எஸ் பிரபு
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…