பட்டினப்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் மீன் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இங்கு உள்ள மணல் திட்டை பொதுப்பணித்துறை அகற்ற வேண்டும் என விஞ்ஞானிகள் மற்றும் மீனவர்கள் கோரிக்கை

பட்டினப்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் பக்கவாட்டு பகுதியில் ஆற்றில் தண்ணீர் தூய்மையாக வந்துகொண்டிருந்த காலத்தில், உவர்நீர் மீன்வளர்ப்பு விஞ்ஞானிகள், மீன் மற்றும் நண்டுகள் வளர்க்க ஆய்வு செய்து அதில் வெற்றியும் அடைந்தனர். இதன் பயனாக இந்த பகுதியில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று தெரிவித்து அதற்கான பயிற்சிகளையும் மீனவர்களுக்கு வழங்கி மீன் வளர்ப்பு செய்தனர். ஆனால் காலப்போக்கில் தண்ணீர் தூய்மை பாதிக்கப்பட்டும் குப்பைக்கூளங்கள் அகற்றாமலும் இந்த இடம் பயன்படுத்தப்படாமல் போனது.

எனவே அடையாறு முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டை ஆண்டு முழுவதும் அகற்றி, இங்குள்ள உப்பங்கழியில் மீன்கள் மற்றும் நண்டுகள் நன்றாக இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அடையாறு கழிமுக மண்டலத்தில் உள்ள உவர்நீர் மீன்வளர்ப்பு விஞ்ஞானிகள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் விரும்புகின்றனர்.

CIBA (Central Institute of Brackishwater Aquacultrure) விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், இந்த உப்பங்கழி மண்டலத்தில் மாசுபாடுகள் இருந்தாலும், கடல்நீரின் நிலையான ஓட்டம் மீன்களின் இனப்பெருக்கத்தை அனுமதிக்கிறது, எனவே PWD மணல் திட்டை அவ்வப்போது அகற்ற வேண்டும் என்று கூறுகிறார்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago