இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள குழுவினர் மார்ச் 1 ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு பி.எஸ். பள்ளி விளையாட்டு மைதானத்தில் பன்னிரெண்டு மணிநேர கலாச்சார நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு முழுவதும் ஓதுவார்கள் உட்பட பல கலைஞர்கள் நிகழ்ச்சிகளை வழங்கும் வகையில் பெரிய மேடை அமைக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அடுத்த நாள் காலை செவ்வாய்கிழமை, மார்ச் 1ம் தேதி காலை 6 மணி வரை நடைபெறும்.
இன்று காலை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, துறை அதிகாரிகள், எம்.எல்.ஏ மற்றும் கோவில் குழுவுடன் விளையாட்டு மைதானத்தில் நிகழ்ச்சிகளை நடத்துவது பற்றி விவாதித்தார்.
கோயில் வளாகத்திற்கு வெளியே இதுபோன்ற மெகா நிகழ்வு நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்று கோயில் வட்டாரங்கள் மயிலாப்பூர் டைம்ஸிடம் தெரிவித்தன.
சுமார் 2000 பேர் அமரும் வகையில் இருக்கைகள், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, மொபைல் கழிப்பறைகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்படும். இரவு முழுவதும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட உள்ளது.
மாலை 6 மணிக்கு ஸ்ரீ கபாலீஸ்வர் கோவிலின் ஆஸ்தான வித்வான் மோகன்தாஸின் நாதஸ்வர இசையுடன் கலாச்சார விழா தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து திருமுறை மற்றும் வேதபாராயணம். இரவில், பட்டிமன்றம், நடனம் – நாடகம், பக்தி மற்றும் நாட்டுப்புற பாடல் கச்சேரிகள் நடைபெறும்.
செய்தி : எஸ்.பிரபு
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…