இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள குழுவினர் மார்ச் 1 ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு பி.எஸ். பள்ளி விளையாட்டு மைதானத்தில் பன்னிரெண்டு மணிநேர கலாச்சார நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு முழுவதும் ஓதுவார்கள் உட்பட பல கலைஞர்கள் நிகழ்ச்சிகளை வழங்கும் வகையில் பெரிய மேடை அமைக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அடுத்த நாள் காலை செவ்வாய்கிழமை, மார்ச் 1ம் தேதி காலை 6 மணி வரை நடைபெறும்.
இன்று காலை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, துறை அதிகாரிகள், எம்.எல்.ஏ மற்றும் கோவில் குழுவுடன் விளையாட்டு மைதானத்தில் நிகழ்ச்சிகளை நடத்துவது பற்றி விவாதித்தார்.
கோயில் வளாகத்திற்கு வெளியே இதுபோன்ற மெகா நிகழ்வு நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்று கோயில் வட்டாரங்கள் மயிலாப்பூர் டைம்ஸிடம் தெரிவித்தன.
சுமார் 2000 பேர் அமரும் வகையில் இருக்கைகள், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, மொபைல் கழிப்பறைகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்படும். இரவு முழுவதும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட உள்ளது.
மாலை 6 மணிக்கு ஸ்ரீ கபாலீஸ்வர் கோவிலின் ஆஸ்தான வித்வான் மோகன்தாஸின் நாதஸ்வர இசையுடன் கலாச்சார விழா தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து திருமுறை மற்றும் வேதபாராயணம். இரவில், பட்டிமன்றம், நடனம் – நாடகம், பக்தி மற்றும் நாட்டுப்புற பாடல் கச்சேரிகள் நடைபெறும்.
செய்தி : எஸ்.பிரபு
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…