மத நிகழ்வுகள்

சிவராத்திரி விழா: இந்து சமய அறநிலையத்துறை பி.எஸ். பள்ளி மைதானத்தில் பெரிய கலாச்சார நிகழ்ச்சியை நடத்த திட்டம்.

இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள குழுவினர் மார்ச் 1 ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு பி.எஸ். பள்ளி விளையாட்டு மைதானத்தில் பன்னிரெண்டு மணிநேர கலாச்சார நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு முழுவதும் ஓதுவார்கள் உட்பட பல கலைஞர்கள் நிகழ்ச்சிகளை வழங்கும் வகையில் பெரிய மேடை அமைக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அடுத்த நாள் காலை செவ்வாய்கிழமை, மார்ச் 1ம் தேதி காலை 6 மணி வரை நடைபெறும்.

இன்று காலை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, துறை அதிகாரிகள், எம்.எல்.ஏ மற்றும் கோவில் குழுவுடன் விளையாட்டு மைதானத்தில் நிகழ்ச்சிகளை நடத்துவது பற்றி விவாதித்தார்.

கோயில் வளாகத்திற்கு வெளியே இதுபோன்ற மெகா நிகழ்வு நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்று கோயில் வட்டாரங்கள் மயிலாப்பூர் டைம்ஸிடம் தெரிவித்தன.

சுமார் 2000 பேர் அமரும் வகையில் இருக்கைகள், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, மொபைல் கழிப்பறைகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்படும். இரவு முழுவதும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட உள்ளது.

மாலை 6 மணிக்கு ஸ்ரீ கபாலீஸ்வர் கோவிலின் ஆஸ்தான வித்வான் மோகன்தாஸின் நாதஸ்வர இசையுடன் கலாச்சார விழா தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து திருமுறை மற்றும் வேதபாராயணம். இரவில், பட்டிமன்றம், நடனம் – நாடகம், பக்தி மற்றும் நாட்டுப்புற பாடல் கச்சேரிகள் நடைபெறும்.

செய்தி : எஸ்.பிரபு

admin

Recent Posts

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

3 hours ago

இளைஞர்களுக்கான புகைப்பட பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது. இதை மயிலாப்பூர் எம்எல்ஏ துவக்கி வைக்கிறார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…

1 day ago

மயிலாப்பூரில் நடைபெற்ற மகாராஷ்டிர தின நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…

3 days ago

எம்.எல்.ஏ., ஸ்பான்சர்களுடன் சேர்ந்து, பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாமை நடத்துகிறார்.

மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…

3 days ago

கோலங்கள் பற்றிய விரிவுரை. ஆர்.ஏ.புரத்தில் உள்ள கம்யூனிட்டி கிளப் நடத்தியது

சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…

4 days ago

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயிண்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் விடுமுறை பைபிள் பள்ளி

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…

4 days ago