சிறப்பு திறன் கொண்ட தீபக் பண்டிகைக் காலத்திற்கு பைகள் மற்றும் அகல்விளக்குகளை வழங்குகிறார். விலை ரூ.25ல் தொடங்குகிறது

லாசரஸ் சர்ச் சாலையில் வசிக்கும் ஷோபா சண்முகன் மற்றும் அவரது மகன் எஸ்.தீபக் (இவர் ஒரு மாற்றுத்திறனாளி) ஆகியோர் திருவிழா நேரத்தில் விற்கக்கூடிய பொருட்களை தயாரித்து விற்று வருகிறார்கள்.

நவராத்திரிக்கு, அவர்களின் சமீபத்திய தயாரிப்பு காடா துணியால் செய்யப்பட்ட பேக் (பை) ஆகும், இது ஷாப்பிங் மற்றும் பரிசுகளுக்கு பயன்படுத்தப்படலாம்.

“எங்களிடம் இந்த பைகள் நான்கு அளவுகள் உள்ளன. என் மகன் தீபக் பைகளில் அக்ரிலிக் ஓவியம் வரைகிறான். குறைந்தபட்சம் 10 ஆர்டருக்கான வாடிக்கையாளர்களுக்கு தேவியான ஆர்டர்களையும் நாங்கள் செய்கிறோம். ஆர்டர் செய்யப்பட்ட பிறகு பைகள் தயாரிக்கப்படுகின்றன, என்று தாய் ஷோபா கூறுகிறார்.

ரூ.25, ரூ.50, ரூ.75 மற்றும் ரூ.100 என, அளவைப் பொறுத்து
பைகளின் விலைகள் உள்ளன.

அவரது தாயின் ஆதரவுடன், வர்ணம் பூசப்பட்ட விளக்குகள், மசாலா பொடிகள் மற்றும் வசம்பு மற்றும் பச்சை கற்பூரம் போன்ற நாட்டு மருந்துகளால் செய்யப்பட்ட இயற்கை பூச்சிக்கொல்லிகளையும் செய்து வருகிறார் தீபக்.

விலை ரூ.40 இந்த பாக்கெட்டுகள் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்,” என்கிறார் ஷோபா.

 

அவர்களின் மற்ற தயாரிப்புகளில் மெழுகுவர்த்தி, நெய் அல்லது வர்ணம் பூசப்பட்ட மண் விளக்குகள், பூஜை மற்றும் தோட்டம் மற்றும் ஆடம்பரமான காட்சிக்கு பயன்படுத்தக்கூடிய வர்ணம் பூசப்பட்ட பானைகள் ஆகியவை அடங்கும்.

ஆர்டர் செய்ய, ஷோபா சண்முகத்தை 9444953733 / 9445635743 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். தயாரிப்புகளை கூரியர் மூலமும் பெறலாம்.

www.dsartscrafts.com இல் இவர்களின் தயாரிப்புகளைப் பார்க்கவும்

செய்தி: ப்ரீத்தா கே.

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

6 days ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

1 month ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 months ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago