சிறப்பு திறன் கொண்ட தீபக் பண்டிகைக் காலத்திற்கு பைகள் மற்றும் அகல்விளக்குகளை வழங்குகிறார். விலை ரூ.25ல் தொடங்குகிறது

லாசரஸ் சர்ச் சாலையில் வசிக்கும் ஷோபா சண்முகன் மற்றும் அவரது மகன் எஸ்.தீபக் (இவர் ஒரு மாற்றுத்திறனாளி) ஆகியோர் திருவிழா நேரத்தில் விற்கக்கூடிய பொருட்களை தயாரித்து விற்று வருகிறார்கள்.

நவராத்திரிக்கு, அவர்களின் சமீபத்திய தயாரிப்பு காடா துணியால் செய்யப்பட்ட பேக் (பை) ஆகும், இது ஷாப்பிங் மற்றும் பரிசுகளுக்கு பயன்படுத்தப்படலாம்.

“எங்களிடம் இந்த பைகள் நான்கு அளவுகள் உள்ளன. என் மகன் தீபக் பைகளில் அக்ரிலிக் ஓவியம் வரைகிறான். குறைந்தபட்சம் 10 ஆர்டருக்கான வாடிக்கையாளர்களுக்கு தேவியான ஆர்டர்களையும் நாங்கள் செய்கிறோம். ஆர்டர் செய்யப்பட்ட பிறகு பைகள் தயாரிக்கப்படுகின்றன, என்று தாய் ஷோபா கூறுகிறார்.

ரூ.25, ரூ.50, ரூ.75 மற்றும் ரூ.100 என, அளவைப் பொறுத்து
பைகளின் விலைகள் உள்ளன.

அவரது தாயின் ஆதரவுடன், வர்ணம் பூசப்பட்ட விளக்குகள், மசாலா பொடிகள் மற்றும் வசம்பு மற்றும் பச்சை கற்பூரம் போன்ற நாட்டு மருந்துகளால் செய்யப்பட்ட இயற்கை பூச்சிக்கொல்லிகளையும் செய்து வருகிறார் தீபக்.

விலை ரூ.40 இந்த பாக்கெட்டுகள் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்,” என்கிறார் ஷோபா.

 

அவர்களின் மற்ற தயாரிப்புகளில் மெழுகுவர்த்தி, நெய் அல்லது வர்ணம் பூசப்பட்ட மண் விளக்குகள், பூஜை மற்றும் தோட்டம் மற்றும் ஆடம்பரமான காட்சிக்கு பயன்படுத்தக்கூடிய வர்ணம் பூசப்பட்ட பானைகள் ஆகியவை அடங்கும்.

ஆர்டர் செய்ய, ஷோபா சண்முகத்தை 9444953733 / 9445635743 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். தயாரிப்புகளை கூரியர் மூலமும் பெறலாம்.

www.dsartscrafts.com இல் இவர்களின் தயாரிப்புகளைப் பார்க்கவும்

செய்தி: ப்ரீத்தா கே.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

1 week ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 weeks ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 weeks ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 weeks ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

1 month ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

1 month ago