2023 ஆம் ஆண்டிற்கான ‘ஸ்பிரிட் ஆஃப் மயிலாப்பூர்’ விருது சென்னை சமஸ்கிருத கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

மயிலாப்பூரில் ஆண்டுதோறும் ஸ்பிரிட் ஆஃப் மயிலாப்பூர் விருதை சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம், மயிலாப்பூர் விழாவின் இறுதி நாளில் வழங்குகிறது.

இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அருகில் உள்ள திறந்தவெளி மேடையில் நடைபெற்ற விழாவில், சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் சி.லோச்சன், சென்னை சமஸ்கிருதக் கல்லூரிக்கு விருதை வழங்கினார். இந்த விருதை கல்லூரி முதல்வர் மற்றும் பொறுப்பாளர் அருணசுந்தரம் பெற்றுக்கொண்டார்.

இந்த கல்லூரி ஒரு அரசு உதவி பெறும் கல்லூரி. இது 1906 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற சட்ட வல்லுநரான வி. கிருஷ்ணசுவாமி ஐயரால் நிறுவப்பட்டது.

2017 ஆம் ஆண்டில், ஆன்லைன் தளத்தின் மூலம் சமஸ்கிருதத்தைப் பரப்புவதற்கும் கற்பிப்பதற்கும் கல்லூரி அதன் டிஜிட்டல் வளாகத்தைத் தொடங்கியது,

இன்று அவர்கள் வளாகத்தில் 300 மாணவர்கள் பயின்று வருகின்றனர், என்று கல்லூரி நிர்வாகம் கூறுகிறது.

விஜயா ஸ்டோர்ஸ், ராசி சில்க்ஸ், டென்னிஸ் ஜாம்பவான் ராமநாதன் கிருஷ்ணன், பிஎஸ் மேல்நிலைப் பள்ளி, டப்பா செட்டி கடை மற்றும் பேராசிரியர் ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் இந்த விருதுகளைப் பெற்றவர்கள்.

இந்த விருதானது மயிலாப்பூர் நபர் அல்லது நிறுவனத்திற்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago