மாணிக்கவாசகர் பொன் ஊஞ்சலில் சுவாமியையும் அம்பாளையும் அமர்ந்திருப்பதை விவரிக்கும் சில அழகான பாசுரங்களை இயற்றினார். ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஜனவரி 3ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நவராத்திரி மண்டபத்தின் முன் கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் ஊஞ்சலில் காட்சி தருவார்கள்.
திருவெம்பாவை உற்சவத்தின் இறுதி நாளான வியாழன் மாலை – 10வது நாள், தெய்வீகத் தம்பதிகளுக்கு முன்பாக இப்புனித பாசுரங்களை சமர்பிப்பார்கள், இதைத்தொடர்ந்து ஆருத்ரா உற்சவத்தை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் மாட வீதிகளை உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த ஊர்வலத்தைத் தொடர்ந்து, நடராஜரும், சிவகாமியும் கோவிலில் உள்ள திரு கல்யாண மண்டபத்திற்கு இரவு சுமார் 10 மணிக்குச் சென்று இரவு ஆருத்ரா உற்சவம் தொடங்குவார்கள்.
அலங்காரம் முடிந்ததும் நள்ளிரவு அபிஷேகம் நடைபெறும். வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு தீப ஆராதனையும், அதைத் தொடர்ந்து 16 தூண்கள் கொண்ட மண்டபத்தில் ஊர்வலமும் நடைபெறும். அன்று காலை நடராஜரும், சிவகாமியும் மாட வீதியில் ஊர்வலம் வருவர்.
செய்தி; எஸ்.பிரபு
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…