ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் பொன்-ஊஞ்சல் உற்சவம். ஜனவரி 3 முதல்.

மாணிக்கவாசகர் பொன் ஊஞ்சலில் சுவாமியையும் அம்பாளையும் அமர்ந்திருப்பதை விவரிக்கும் சில அழகான பாசுரங்களை இயற்றினார். ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஜனவரி 3ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நவராத்திரி மண்டபத்தின் முன் கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் ஊஞ்சலில் காட்சி தருவார்கள்.

திருவெம்பாவை உற்சவத்தின் இறுதி நாளான வியாழன் மாலை – 10வது நாள், தெய்வீகத் தம்பதிகளுக்கு முன்பாக இப்புனித பாசுரங்களை சமர்பிப்பார்கள், இதைத்தொடர்ந்து ஆருத்ரா உற்சவத்தை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் மாட வீதிகளை உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த ஊர்வலத்தைத் தொடர்ந்து, நடராஜரும், சிவகாமியும் கோவிலில் உள்ள திரு கல்யாண மண்டபத்திற்கு இரவு சுமார் 10 மணிக்குச் சென்று இரவு ஆருத்ரா உற்சவம் தொடங்குவார்கள்.

அலங்காரம் முடிந்ததும் நள்ளிரவு அபிஷேகம் நடைபெறும். வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு தீப ஆராதனையும், அதைத் தொடர்ந்து 16 தூண்கள் கொண்ட மண்டபத்தில் ஊர்வலமும் நடைபெறும். அன்று காலை நடராஜரும், சிவகாமியும் மாட வீதியில் ஊர்வலம் வருவர்.

செய்தி; எஸ்.பிரபு

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

3 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

4 weeks ago