ஆழ்வார்பேட்டை ஸ்ரீமான் சீனிவாசன் சாலை இப்போது ஒருவவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

ஸ்ரீமான் சீனிவாசன் சாலை, ஆழ்வார்பேட்டை, டி.டி.கே சாலையில் நாரத கான சபா அருகே, உள்ளூர்வாசிகளுக்குத் தெரியாத காரணங்களுக்காக ‘ஒரு வழிப் பாதை’ ஆக்கப்பட்டுள்ளது. டி.டி.கே சாலையின் பக்கத்திலிருந்து மட்டுமே இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியும்.

மியூசிக் அகாடமி பக்கம் இருந்து கஸ்தூரி ரங்கன் சாலை பக்கம் செல்லும் ஸ்ரீமான் சீனிவாசன் சாலையில் வசிப்பவர்கள் தற்போது அம்புஜம்மாள் சாலை வழியாக சென்று டி.டி.கே சாலையை அடைகின்றனர்.

இந்தச் சாலையின் சந்திப்பில் உள்ள ஒரு உயர் வகுப்பு உடற்பயிற்சி கூடத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான வாகனங்களை ஸ்ரீமான் சீனிவாசன் சாலையில் இருபுறமும் நிறுத்தியுள்ளதால், உள்ளூர்வாசிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

சாலையிலும், ‘ஒருபுறம் பார்க்கிங்’ செய்யப்பட்டுள்ளது.

இந்த உடற்பயிற்சி கூடத்தின் பார்க்கிங் வசதிக்காகவும், உள்ளூர் காவல்துறைக்கு எண்ணற்ற புகார்களை அளித்த குடியிருப்பாளர்களை சமாதானப்படுத்தவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இங்கு வசிப்பவர்கள் கருதுகின்றனர்.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

1 day ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

3 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

4 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

6 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

1 week ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago