செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள், பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள். ஸ்ரீராம் குழுமத்தால் நடத்தப்படுகிறது.

இந்தியாவின் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீராம் குழுமத்தின் இலக்கியப் பிரிவான ஸ்ரீராம் இலக்கியக் கழகம், 2024 ஆம் ஆண்டிற்கான திருக்குறள் சொற்பொழிவு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்துகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய 12 மையங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக ஆண்டுதோறும் மாநில அளவிலான இந்த போட்டி ஜூலை 20 முதல் ஆகஸ்டு 25 வரை நடைபெறுகிறது.

சென்னை மண்டல போட்டிகள் அண்ணாநகர் சிஎஸ்ஐ ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் பள்ளியிலும் ஜூலை 20ம் தேதியும், கிழக்கு தாம்பரத்தில் உள்ள கிறிஸ்ட் கிங் பெண்கள் பள்ளியிலும் ஜூலை 27ம் தேதியும் நடக்கிறது.

பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப் படிவங்களை ஸ்ரீராம் சிட்ஸ், 145, சாந்தோம் ஹை ரோடு, மயிலாப்பூர், சென்னை – 600 004 (Ph: 044 – 4021 4100) என்ற முகவரியிலிருந்து பெறலாம் அல்லது www.shriramchits.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 13 ஆகும்.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் ஸ்ரீநிவாசப் பெருமாள் பவித்ரோத்ஸவம் செப்டம்பர் 23 வரை நடைபெறுகிறது.

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாளின் வருடாந்திர பவித்ரோத்ஸவம் செப்டம்பர் 17 முதல் 23…

4 hours ago

அழகான ஓணம் அலங்காரங்கள்; ஐந்து பேர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

மயிலாப்பூர் டைம்ஸ் நடத்திய ஓணம் அலங்காரப் போட்டியில் 25க்கும் மேற்பட்ட பதிவுகள் வந்தன. சிறிய, கச்சிதமான பூக்கள் நிறைந்த பூக்கோலம்…

1 day ago

வடக்கு மாட வீதியில் கொலு பொம்மை வியாபாரிகள் கடைகளை திறந்துள்ளனர். இந்த வார இறுதியில் வெரைட்டியான பொம்மைகள் விற்பனைக்கு வரும்.

மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கொலு பொம்மைகள் விற்கும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பல இப்போது சிறிய ஸ்டால்களாக உள்ளது. பாரம்பரிய…

1 day ago

இலவச கண் பரிசோதனை முகாம். மந்தைவெளிப்பாக்கம். செப்டம்பர் 22

மந்தைவெளிப்பாக்கம் ஜெயா கண் சிகிச்சை மையம், மந்தைவெளிப்பாக்கம் டி.எம்.எஸ் சாலை எண்.29ல் உள்ள தி கல்யாண நகர் அசோசியேஷன் வளாகத்தில்…

1 day ago

கொலு பொம்மைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டுமா? தபால் அலுவலகம் மூலம் நீங்கள் அனுப்பலாம்.

கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையம் வெளிநாடுகளுக்கு கொலு பொம்மைகளை அனுப்பும் பணியை தொடங்கியுள்ளது. கடந்த வாரம், ஒரு…

2 days ago

மெரினாவில் இந்திய விமானப்படையின் கண்காட்சி. அக்டோபர் 5 மற்றும் 6 தேதிகளில்

இந்திய விமானப்படை அதன் நிறுவன தின விழாவை அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கொண்டாடுகிறது. கொண்டாட்டங்களுக்கு முன்னதாக,…

2 days ago