மயிலாப்பூர் திருவிழாவின் இறுதி நாளில் ஆயிரக்கணக்கானோர் நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.

மயிலாப்பூர் திருவிழாவின் நான்காவது மற்றும் கடைசி நாள், ஜனவரி 8, ஞாயிற்றுக்கிழமை மயிலாப்பூர் வீதிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தது, மேலும் ஒவ்வொரு நிகழ்வும் பெரிய அளவிலான பார்வையாளர்களை கொண்டிருந்தது.

காலை 7 மணிக்கு நடந்த இரண்டு நடைப்பயணங்கள் பெரிய ஹிட். டாக்டர் சித்ரா மாதவன், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெளியே தொடங்கிய பயணத்தில் (மயிலாப்பூர் கோயில்கள் – நடைப்பயணம்) சுமார் 200 பேர் கலந்து கொணடனர்.

 

ஷாலினி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற நடைப்பயணத்தில் (மயிலாப்பூரில் உள்ள கிளாசிக் ஓல்ட் ஹவுஸ்) சுமார் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில், காலை 8.30 மணியளவில் நடைபெற்ற போட்டிகளில் செஸ் சதுக்கம் முழுவதும் குழந்தைகள் நிரம்பி காணப்பட்டனர்; மைக்லெஸ் கச்சேரி முடிந்ததும், சதுரங்கப் போட்டியும், கைவினை பயிற்சி பட்டறையும் நடைபெற்றது.

மதியம் 3 மணியளவில், நித்ய அமிர்தம் உணவகத்தின் முதல் தளம் பரபரப்பானது; மதிய உணவு முடிந்தவுடன் சுமார் 3.30 மணியளவில் சமையல் போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்த சமையல் போட்டிகளை ஸ்ரீதர் வெங்கடராமன் ஒருங்கிணைத்து நடத்தினார். கருப்பொருள்கள்; சட்னி மற்றும் ரசம்.

மாநில ஆளுநர் மயிலாப்பூர் மாட வீதிகள் வழியாக உள்ளூர் அரங்கில் நடைபெற்ற நடனக் கச்சேரியில் கலந்து கொள்ளச் சென்றதால், கோலம் மற்றும் ரங்கோலி போட்டிகள் தாமதமானது; எனவே கோலப் போட்டிகள் மாலை 3.40 மணிக்குத்தான் தொடங்கியது. ஆனால் ஒரு மணி நேரத்தில் வடக்கு மாட வீதியின் கிழக்கு முனை கோலங்களால் அழகான வடிவமைப்புகளின் கம்பளமாக மாறியது.

லேடி சிவசுவாமி ஐயர் பெண்கள் பள்ளியில் உள்ள மண்டபத்தில், பல்லாங்குழி போட்டியில் 75 பேர் கலந்து கொண்டனர்; பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான போட்டிகள் நடந்தன.

மேடை நிகழ்ச்சிகள் மாலை 5.30 மணிக்கு தொடங்கியது மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை, இராணி மேரி கல்லூரி மாணவர்கள் நிகழ்ச்சியில் முதலாவதாக, சிலம்பம் பயிற்சி பெற்ற ஐந்து சிறுமிகள் 1500க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை தங்கள் அற்புதமான சிலம்பாட்டத்தால் உற்சாகப்படுத்தினர். பின்னர், சுமார் 25க்கும் மேற்பட்ட பெண்கள் இந்திய நாட்டுப்புற நடனங்களின் வண்ணமயமான நடனத்தை வழங்கினர்.

சுப்ரமணியம் தலைமையிலான கே.எஸ்.ஆர் ஆர்கெஸ்ட்ரா குழுவினர் வழங்கிய கிளாசிக்கல் தமிழ் திரைப்படப் பாடல்களின் கச்சேரியுடன் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவடைந்தது.

கடைசி நாள் மாலையில் ஒரு ஏமாற்றம் என்னவென்றால், இந்த பகுதியில் உள்ள ஒரு நடன அரங்கிற்கு மாநில ஆளுநரின் வருகைக்காக இங்குள்ள பாதுகாப்பு விதிமுறைகளின் காரணமாக ஃபுட் ஸ்ட்ரீட் ஸ்டால்கள் மூடப்பட்டன.

கோவில் பகுதிகளில் ஆயிரக் கணக்கான மக்கள் வந்து கண்டு மகிழ்ந்த மாபெரும் திருவிழாவாக இந்த மயிலாப்பூர் திருவிழா அமைந்திருந்தது.

திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளின் 30 சிறிய வீடியோக்களை கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து பார்க்கவும். https://www.youtube.com/@mylaporefestival7626

மயிலாப்பூர் திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளின் புகைப்படங்களையும் கீழ்க்காணும் இணைப்பை கிளிக் செய்து பார்க்கவும். http://mylaporefestival.in/2023/gallery.html

admin

Recent Posts

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

4 days ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

1 month ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 months ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 months ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 months ago