Categories: சமூகம்

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வன்னியம்பதி பகுதியில் புதிய கட்டிடப்பணிகளை விரைவில் தொடங்க உள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள வன்னியம்பதி பகுதி ஒரு பெரிய பகுதி. இங்கு சுமார் நாற்பது/ஐம்பது வருடங்களுக்கு முன்னால் குடிசையில் வசித்து வந்த மக்களுக்கு பதின்மூன்று பிளாக் வீடுகள் அரசால் கட்டி கொடுக்கப்பட்டது.

இந்த வீடுகள் தற்போது பழுதடைந்து விட்டதால் அரசாங்கம் இந்த பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்களை கட்டி திரும்ப ஒப்படைப்பதற்க்காக இங்கு வசித்து வந்த மக்களை காலி செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். எனவே அரசின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த இரண்டு மாதங்களாக இங்கு வசித்து வந்த மக்கள் வீடுகளை காலி செய்து வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி இங்கு சுமார் இருபத்தைந்து குடும்பங்களே வசித்து வருகின்றனர். இவர்களும் வருகின்ற டிசம்பர் 10ம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய உள்ளனர். மொத்தமாக இங்கு சுமார் முந்நூறு குடும்பங்கள் வசித்து வந்தனர், இது தவிர இந்த பகுதியில் சிலர் ஆக்கிரமிப்பின் மூலம் வீடுகளும் கடைகளும் வைத்திருந்தனர் அவர்களும் காலி செய்து விட்டனர்.

இங்கு வசித்து வந்த மக்கள் தங்களுடைய தொழில், வேலை, குழந்தைகளின் படிப்பு காரணமாக மயிலாப்பூர் பகுதியிலேயே வாடகைக்கு வீடுகளை பார்க்க வேண்டி உள்ளது. மயிலாப்பூர், மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரம் மற்றும் மந்தைவெளிப்பாக்கம் போன்ற பகுதிகளில் வீட்டு வாடகை அதிகமாக உள்ளதால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர். எனவே அரசாங்கம், விரைந்து இந்த பணிகளை முடித்து வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், மீதி உள்ள இருபத்தைந்து குடும்பங்கள் வரும் 10ம் தேதிக்குள் வீடுகளை காலி செய்த பிறகு, இங்கு தங்களுடைய பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 weeks ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

3 weeks ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

4 weeks ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

4 weeks ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

1 month ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

1 month ago