வித்யா மந்திர் மாணவி ஷர்வாணி டேபிள் டென்னிஸ் விளையாட்டில் முதலிடம் பிடிக்கும் நோக்கத்தில் விளையாடி வருகிறார்.

வித்யா மந்திர் பத்தாம் வகுப்பு மாணவி என்.ஷர்வாணி டேபிள் டென்னிஸில் சாதனை படைத்து வருகிறார்.

15 வயதான அவர், நாட்டிலுள்ள 19 வயதுக்குட்பட்டவர்களில் சிறந்தவர்களுடன் போட்டியிடுகிறார். அவர் ஏற்கனவே 15 வயதுக்குட்பட்டோருக்கான நான்கு மாநில தரவரிசைப் போட்டிகளிலும், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளார்.

தற்போது 15 வயதுக்குட்பட்டோரில் மாநில அளவில் முதலிடம் வகிக்கிறார். கடந்த ஆண்டு, துனிசியாவில் நடந்த சர்வதேச போட்டியில் 8வது இடம் பிடித்தார். 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட இரு பிரிவுகளிலும், தேசிய அளவில் முதல் ஐந்து இடங்களில் உள்ளார்

மயிலாப்பூர் கிளப்பில் தனது தந்தை மற்றும் பயிற்சியாளர் நாகம் பிரசாத்தின் கீழ் தினமும் ஆறு மணிநேரம் பயிற்சி பெறுவதாக அவர் கூறுகிறார்.

ஷர்வாணி மயிலாப்பூர் டைம்ஸிடம், ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது இறுதி நோக்கம், “டிடியில் எந்த இந்தியரும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதில்லை. இந்தியாவுக்காக தங்கம் வெல்வதே எனது நோக்கம், இதை ஒரு நாள் என்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

விரைவில், தேசிய மகளிர் சாம்பியன்ஷிப்பை வெல்வதே தனது நோக்கமாக இருப்பதாக அவர் கூறுகிறார்.

கல்வியிலும் சிறப்பாகச் செயல்படுகிறார். அறிவியலில் ஆழ்ந்த ஆர்வம் உள்ளது என்றும், குறிப்பாக விண்வெளி தொடர்பான படிப்பை படிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

செய்தி மற்றும் புகைப்படம்: எஸ்.பிரபு

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

4 days ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

4 days ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

2 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

3 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 months ago