15 வயதான அவர், நாட்டிலுள்ள 19 வயதுக்குட்பட்டவர்களில் சிறந்தவர்களுடன் போட்டியிடுகிறார். அவர் ஏற்கனவே 15 வயதுக்குட்பட்டோருக்கான நான்கு மாநில தரவரிசைப் போட்டிகளிலும், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளார்.
தற்போது 15 வயதுக்குட்பட்டோரில் மாநில அளவில் முதலிடம் வகிக்கிறார். கடந்த ஆண்டு, துனிசியாவில் நடந்த சர்வதேச போட்டியில் 8வது இடம் பிடித்தார். 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட இரு பிரிவுகளிலும், தேசிய அளவில் முதல் ஐந்து இடங்களில் உள்ளார்
மயிலாப்பூர் கிளப்பில் தனது தந்தை மற்றும் பயிற்சியாளர் நாகம் பிரசாத்தின் கீழ் தினமும் ஆறு மணிநேரம் பயிற்சி பெறுவதாக அவர் கூறுகிறார்.
ஷர்வாணி மயிலாப்பூர் டைம்ஸிடம், ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது இறுதி நோக்கம், “டிடியில் எந்த இந்தியரும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதில்லை. இந்தியாவுக்காக தங்கம் வெல்வதே எனது நோக்கம், இதை ஒரு நாள் என்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.
விரைவில், தேசிய மகளிர் சாம்பியன்ஷிப்பை வெல்வதே தனது நோக்கமாக இருப்பதாக அவர் கூறுகிறார்.
கல்வியிலும் சிறப்பாகச் செயல்படுகிறார். அறிவியலில் ஆழ்ந்த ஆர்வம் உள்ளது என்றும், குறிப்பாக விண்வெளி தொடர்பான படிப்பை படிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
செய்தி மற்றும் புகைப்படம்: எஸ்.பிரபு
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…