தொல்காப்பியப் பூங்காவிற்குள் நடைபயணம் செய்ய அனுமதி : கட்டணத்துடன்.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள தொல்காப்பியப் பூங்காவிற்குள் நடைபயணம் செய்பவர்கள் கட்டணம் செலுத்தி இனி நடக்கலாம். எனவே மயிலாப்பூர்வாசிகள் இப்போது நடைபயணத்திற்குச் செல்ல சிறந்த பசுமையான இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

தெற்கு ஆர்.ஏ.புரத்தில் உள்ள தொல்காப்பிய பூங்காவில் (அடையார் பூங்கா) இப்போது கட்டணம் செலுத்தி நடைபயணம் மேற்கொள்ளலாம். இதையும் மற்ற திட்டங்களையும் நிர்வகிக்கும் சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை (சிசிஆர்ஆர்டி) தற்போது டாக்டர் டி ஜி எஸ் தினகரன் சாலையில் உள்ள வாயில்களை (குச்சிப்புடி அகாடமிக்கு அருகில் உள்ளது) திறந்துள்ளது.

காலையிலும் (காலை 6.30 முதல் 8.00 வரை) மாலையிலும் (மாலை 4.30 முதல் மாலை 6.00 வரை) நடைப்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு காலை மற்றும் மாலை நடைபயணம் செய்ய நீங்கள் ரூ.20 செலுத்த வேண்டும். ஒரு மாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு (ரூ.500/ரூ.1500 கட்டணம்) .

நீங்கள் இங்கு அனுமதி பெறுவதற்கு செய்ய வேண்டியது, ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கி (http://www.chennairivers.gov.in/pdf/Application%20Form%20-%20Walking%20-%20Tholkappia%20Poonga%20-%20Registration.pdf) விண்ணப்பபடிவத்தை பணத்துடன் அல்லது டிமாண்ட் டிராஃப்ட் மூலம் சமர்ப்பிக்க வேண்டும், பின்னர் உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு . பூங்காவிற்குள் செல்ல அடையாள அட்டை உங்களுக்கு வழங்கப்படும். பூங்காவின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்குள் மட்டுமே நடைபயிற்சி செய்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் விதிகளை மீறுபவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் சிசிஆர்ஆர்டி தெரிவித்துள்ளது.

admin

Recent Posts

தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது

மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. (இந்த இடம் பொதுவாக…

2 hours ago

சாய்பாபா கோயிலுக்கு அருகிலுள்ள கடைகள் இடிப்பு. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நடவடிக்கை.

மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளை குடிமைப் பணியாளர்கள்…

18 hours ago

மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கடைகளில் சிறப்பு சலுகைகள்

பெண்களுக்கான யோகா இலவச அனுபவம்; அடிப்படை பயிற்சி மந்தைவெளியில் உள்ள யோகா ஃபார் வெல்னஸ் ஸ்டுடியோவில். மார்ச் 8 காலை.…

2 days ago

மயிலாப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ‘அமைதி கிளப்புகள்’. இறுதிப் போட்டி.

காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…

7 days ago

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான படிப்பு அரங்கம், குழந்தைகளுக்கான பிரிவும் உள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…

7 days ago

மெரினா கடற்கரையில் மாசி மகம் சடங்குகள்

மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…

7 days ago