ஆர்.ஏ.புரத்தில் உள்ள தொல்காப்பியப் பூங்காவிற்குள் நடைபயணம் செய்பவர்கள் கட்டணம் செலுத்தி இனி நடக்கலாம். எனவே மயிலாப்பூர்வாசிகள் இப்போது நடைபயணத்திற்குச் செல்ல சிறந்த பசுமையான இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.
தெற்கு ஆர்.ஏ.புரத்தில் உள்ள தொல்காப்பிய பூங்காவில் (அடையார் பூங்கா) இப்போது கட்டணம் செலுத்தி நடைபயணம் மேற்கொள்ளலாம். இதையும் மற்ற திட்டங்களையும் நிர்வகிக்கும் சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை (சிசிஆர்ஆர்டி) தற்போது டாக்டர் டி ஜி எஸ் தினகரன் சாலையில் உள்ள வாயில்களை (குச்சிப்புடி அகாடமிக்கு அருகில் உள்ளது) திறந்துள்ளது.
காலையிலும் (காலை 6.30 முதல் 8.00 வரை) மாலையிலும் (மாலை 4.30 முதல் மாலை 6.00 வரை) நடைப்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு காலை மற்றும் மாலை நடைபயணம் செய்ய நீங்கள் ரூ.20 செலுத்த வேண்டும். ஒரு மாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு (ரூ.500/ரூ.1500 கட்டணம்) .
நீங்கள் இங்கு அனுமதி பெறுவதற்கு செய்ய வேண்டியது, ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கி (http://www.chennairivers.gov.in/pdf/Application%20Form%20-%20Walking%20-%20Tholkappia%20Poonga%20-%20Registration.pdf) விண்ணப்பபடிவத்தை பணத்துடன் அல்லது டிமாண்ட் டிராஃப்ட் மூலம் சமர்ப்பிக்க வேண்டும், பின்னர் உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு . பூங்காவிற்குள் செல்ல அடையாள அட்டை உங்களுக்கு வழங்கப்படும். பூங்காவின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்குள் மட்டுமே நடைபயிற்சி செய்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் விதிகளை மீறுபவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் சிசிஆர்ஆர்டி தெரிவித்துள்ளது.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…