ஆர்.ஏ.புரத்தில் உள்ள தொல்காப்பியப் பூங்காவிற்குள் நடைபயணம் செய்பவர்கள் கட்டணம் செலுத்தி இனி நடக்கலாம். எனவே மயிலாப்பூர்வாசிகள் இப்போது நடைபயணத்திற்குச் செல்ல சிறந்த பசுமையான இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.
தெற்கு ஆர்.ஏ.புரத்தில் உள்ள தொல்காப்பிய பூங்காவில் (அடையார் பூங்கா) இப்போது கட்டணம் செலுத்தி நடைபயணம் மேற்கொள்ளலாம். இதையும் மற்ற திட்டங்களையும் நிர்வகிக்கும் சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை (சிசிஆர்ஆர்டி) தற்போது டாக்டர் டி ஜி எஸ் தினகரன் சாலையில் உள்ள வாயில்களை (குச்சிப்புடி அகாடமிக்கு அருகில் உள்ளது) திறந்துள்ளது.
காலையிலும் (காலை 6.30 முதல் 8.00 வரை) மாலையிலும் (மாலை 4.30 முதல் மாலை 6.00 வரை) நடைப்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு காலை மற்றும் மாலை நடைபயணம் செய்ய நீங்கள் ரூ.20 செலுத்த வேண்டும். ஒரு மாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு (ரூ.500/ரூ.1500 கட்டணம்) .
நீங்கள் இங்கு அனுமதி பெறுவதற்கு செய்ய வேண்டியது, ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கி (http://www.chennairivers.gov.in/pdf/Application%20Form%20-%20Walking%20-%20Tholkappia%20Poonga%20-%20Registration.pdf) விண்ணப்பபடிவத்தை பணத்துடன் அல்லது டிமாண்ட் டிராஃப்ட் மூலம் சமர்ப்பிக்க வேண்டும், பின்னர் உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு . பூங்காவிற்குள் செல்ல அடையாள அட்டை உங்களுக்கு வழங்கப்படும். பூங்காவின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்குள் மட்டுமே நடைபயிற்சி செய்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் விதிகளை மீறுபவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் சிசிஆர்ஆர்டி தெரிவித்துள்ளது.
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன்…
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…