ஆர்.ஏ.புரத்தில் உள்ள தொல்காப்பியப் பூங்காவிற்குள் நடைபயணம் செய்பவர்கள் கட்டணம் செலுத்தி இனி நடக்கலாம். எனவே மயிலாப்பூர்வாசிகள் இப்போது நடைபயணத்திற்குச் செல்ல சிறந்த பசுமையான இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.
தெற்கு ஆர்.ஏ.புரத்தில் உள்ள தொல்காப்பிய பூங்காவில் (அடையார் பூங்கா) இப்போது கட்டணம் செலுத்தி நடைபயணம் மேற்கொள்ளலாம். இதையும் மற்ற திட்டங்களையும் நிர்வகிக்கும் சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை (சிசிஆர்ஆர்டி) தற்போது டாக்டர் டி ஜி எஸ் தினகரன் சாலையில் உள்ள வாயில்களை (குச்சிப்புடி அகாடமிக்கு அருகில் உள்ளது) திறந்துள்ளது.
காலையிலும் (காலை 6.30 முதல் 8.00 வரை) மாலையிலும் (மாலை 4.30 முதல் மாலை 6.00 வரை) நடைப்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு காலை மற்றும் மாலை நடைபயணம் செய்ய நீங்கள் ரூ.20 செலுத்த வேண்டும். ஒரு மாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு (ரூ.500/ரூ.1500 கட்டணம்) .
நீங்கள் இங்கு அனுமதி பெறுவதற்கு செய்ய வேண்டியது, ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கி (http://www.chennairivers.gov.in/pdf/Application%20Form%20-%20Walking%20-%20Tholkappia%20Poonga%20-%20Registration.pdf) விண்ணப்பபடிவத்தை பணத்துடன் அல்லது டிமாண்ட் டிராஃப்ட் மூலம் சமர்ப்பிக்க வேண்டும், பின்னர் உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு . பூங்காவிற்குள் செல்ல அடையாள அட்டை உங்களுக்கு வழங்கப்படும். பூங்காவின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்குள் மட்டுமே நடைபயிற்சி செய்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் விதிகளை மீறுபவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் சிசிஆர்ஆர்டி தெரிவித்துள்ளது.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…