உங்களது பழைய கொலு பொம்மைகளுக்கு வண்ணம் தீட்ட வேண்டுமா? இந்த கலைஞரிடம் கொண்டு செல்லுங்கள்.

சித்திரகுளம் குளத்தையொட்டி உள்ள சிறிய கடையின் மேற்கு பகுதியில் கொலு பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டி பழமை மாறாமல் அழகுபடுத்துபவர் கலைஞர் எஸ்.பரமசிவன். இந்த சீசனில் நீண்ட நேரம் வேலை செய்கிறார். ஏனென்றால், இந்த நேரத்தில் அவர் தேவையுள்ள ஒரு கலைஞர் – விண்டேஜ் பொம்மைகளை மீண்டும் வண்ணம் தீட்டக்கூடிய சில கலைஞர்களில் இவரும் ஒருவர்.

எனவே, வரும் நவராத்திரி விழாவை முன்னிட்டு, அவரது திறமையை நம்பும் மயிலாப்பூர்வாசிகள், தங்கள் குலதெய்வ பொம்மைகளுடன், இவரது கடைக்கு வருகின்றனர்.

போக்குவரத்து சத்தங்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளின் சத்தங்கள், எவற்றையும் பொருட்படுத்தாமல் அனுபவம் வாய்ந்த, தொழில்ரீதியாக பயிற்சி பெற்ற கலைஞர் பரமசிவன், கையில் இருக்கும் வேலையைச் செய்ய தனது நேரத்தை எடுத்துக்கொள்கிறார். இந்த வேலையில் அவசரம் காட்ட முடியாது என்றும், அதனால் வரும் அனைத்து வேலைகளையும் அவர் ஏற்பதில்லை என்றும் கூறுகிறார்.

பரமசிவன் பல வருடங்களாக பொம்மைகளுக்கு புது உயிர் கொடுத்து வருகிறார். அவர் இந்த தொழிலில் கைதேர்ந்த நிபுணர். இப்போது சந்தைகளில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் பொம்மைகள் சராசரி தரம் மற்றும் கலைத் தகுதியில் மோசமானவை என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.

பரமசிவன் ஆண்டு முழுவதும் பிஸியாக இருக்கிறார்.

இந்த சீசனில் பரமசிவனின் மருமகன் முருகேசன் தங்கள் சேவையை விரிவுபடுத்த முடிவு செய்தார். தமிழ்நாட்டில் கடலூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற இடங்களில் கைவினைஞர்களால் செய்யப்பட்ட பொம்மைகளை வாங்கி வந்து இவரது கடையில் விற்பனையும் செய்கிறார்.

“நாங்கள் கலைஞர்கள் என்பதால், நன்கு தயாரிக்கப்பட்ட பொம்மைகளை கவனமாகத் தேர்ந்தெடுத்து இங்கே கொண்டு வந்து விற்பனை செய்கிறோம்,” என்கிறார் பரமசிவன்.

கடையில் உள்ள அலமாரிகளில் ஒரு வரையறுக்கப்பட்ட வகைகள் காட்சிக்கு மற்றும் விற்பனைக்கு உள்ளன. விலை ரூ.150ல் தொடங்குகிறது. பெரிய பொம்மைகளின் விலை ரூ.7,500 முதல் ரூ.10,000 வரைஉள்ளது.

மயிலாப்பூர் சித்திரகுளம் மேற்கு தெருவில் பரமசிவன் கடை உள்ளது. போன்:9841945161 / 7010727239.

மேலும் இவரது கடையின் வீடியோவை இங்கே பார்க்கவும் – https://www.youtube.com/watch?v=kv-3pYR8n10

admin

Recent Posts

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

6 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

1 month ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

1 month ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 months ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 months ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

2 months ago