உங்களது பழைய கொலு பொம்மைகளுக்கு வண்ணம் தீட்ட வேண்டுமா? இந்த கலைஞரிடம் கொண்டு செல்லுங்கள்.

சித்திரகுளம் குளத்தையொட்டி உள்ள சிறிய கடையின் மேற்கு பகுதியில் கொலு பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டி பழமை மாறாமல் அழகுபடுத்துபவர் கலைஞர் எஸ்.பரமசிவன். இந்த சீசனில் நீண்ட நேரம் வேலை செய்கிறார். ஏனென்றால், இந்த நேரத்தில் அவர் தேவையுள்ள ஒரு கலைஞர் – விண்டேஜ் பொம்மைகளை மீண்டும் வண்ணம் தீட்டக்கூடிய சில கலைஞர்களில் இவரும் ஒருவர்.

எனவே, வரும் நவராத்திரி விழாவை முன்னிட்டு, அவரது திறமையை நம்பும் மயிலாப்பூர்வாசிகள், தங்கள் குலதெய்வ பொம்மைகளுடன், இவரது கடைக்கு வருகின்றனர்.

போக்குவரத்து சத்தங்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளின் சத்தங்கள், எவற்றையும் பொருட்படுத்தாமல் அனுபவம் வாய்ந்த, தொழில்ரீதியாக பயிற்சி பெற்ற கலைஞர் பரமசிவன், கையில் இருக்கும் வேலையைச் செய்ய தனது நேரத்தை எடுத்துக்கொள்கிறார். இந்த வேலையில் அவசரம் காட்ட முடியாது என்றும், அதனால் வரும் அனைத்து வேலைகளையும் அவர் ஏற்பதில்லை என்றும் கூறுகிறார்.

பரமசிவன் பல வருடங்களாக பொம்மைகளுக்கு புது உயிர் கொடுத்து வருகிறார். அவர் இந்த தொழிலில் கைதேர்ந்த நிபுணர். இப்போது சந்தைகளில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் பொம்மைகள் சராசரி தரம் மற்றும் கலைத் தகுதியில் மோசமானவை என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.

பரமசிவன் ஆண்டு முழுவதும் பிஸியாக இருக்கிறார்.

இந்த சீசனில் பரமசிவனின் மருமகன் முருகேசன் தங்கள் சேவையை விரிவுபடுத்த முடிவு செய்தார். தமிழ்நாட்டில் கடலூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற இடங்களில் கைவினைஞர்களால் செய்யப்பட்ட பொம்மைகளை வாங்கி வந்து இவரது கடையில் விற்பனையும் செய்கிறார்.

“நாங்கள் கலைஞர்கள் என்பதால், நன்கு தயாரிக்கப்பட்ட பொம்மைகளை கவனமாகத் தேர்ந்தெடுத்து இங்கே கொண்டு வந்து விற்பனை செய்கிறோம்,” என்கிறார் பரமசிவன்.

கடையில் உள்ள அலமாரிகளில் ஒரு வரையறுக்கப்பட்ட வகைகள் காட்சிக்கு மற்றும் விற்பனைக்கு உள்ளன. விலை ரூ.150ல் தொடங்குகிறது. பெரிய பொம்மைகளின் விலை ரூ.7,500 முதல் ரூ.10,000 வரைஉள்ளது.

மயிலாப்பூர் சித்திரகுளம் மேற்கு தெருவில் பரமசிவன் கடை உள்ளது. போன்:9841945161 / 7010727239.

மேலும் இவரது கடையின் வீடியோவை இங்கே பார்க்கவும் – https://www.youtube.com/watch?v=kv-3pYR8n10

admin

Recent Posts

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வைகாசி திருவிழா. ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது

மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி திருவிழா மற்றும் விடையாற்றி கலை விழா ஜூன் 1 ஆம் தேதி…

12 hours ago

‘கழிவுகளை சிறப்பான ஒன்றாக உருவாக்குவது எப்படி’ பயிலரங்கம். மே 24.

FICCI FLO இன் ஆதரவுடன் EcoKonnectors Trust மற்றும் Munnetram Trust ஆகியவை திறன் மேம்பாட்டின் மூலம் சுய உதவிக்குழு…

2 days ago

மயிலாப்பூரில் ஜூனியர்களுக்கான செஸ் போட்டி

64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…

2 days ago

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் பழுதுபார்ப்புக்காக மூடப்பட்டது.

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…

2 days ago

ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டோ உதிரிபாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல்.

மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…

2 days ago

வில்லிவாக்கத்தில் குடும்பத்தினருடன் ‘காணாமல் போன நபர்’ மீண்டும் இணைந்தார்.

மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…

3 days ago