உங்களது பழைய கொலு பொம்மைகளுக்கு வண்ணம் தீட்ட வேண்டுமா? இந்த கலைஞரிடம் கொண்டு செல்லுங்கள்.

சித்திரகுளம் குளத்தையொட்டி உள்ள சிறிய கடையின் மேற்கு பகுதியில் கொலு பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டி பழமை மாறாமல் அழகுபடுத்துபவர் கலைஞர் எஸ்.பரமசிவன். இந்த சீசனில் நீண்ட நேரம் வேலை செய்கிறார். ஏனென்றால், இந்த நேரத்தில் அவர் தேவையுள்ள ஒரு கலைஞர் – விண்டேஜ் பொம்மைகளை மீண்டும் வண்ணம் தீட்டக்கூடிய சில கலைஞர்களில் இவரும் ஒருவர்.

எனவே, வரும் நவராத்திரி விழாவை முன்னிட்டு, அவரது திறமையை நம்பும் மயிலாப்பூர்வாசிகள், தங்கள் குலதெய்வ பொம்மைகளுடன், இவரது கடைக்கு வருகின்றனர்.

போக்குவரத்து சத்தங்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளின் சத்தங்கள், எவற்றையும் பொருட்படுத்தாமல் அனுபவம் வாய்ந்த, தொழில்ரீதியாக பயிற்சி பெற்ற கலைஞர் பரமசிவன், கையில் இருக்கும் வேலையைச் செய்ய தனது நேரத்தை எடுத்துக்கொள்கிறார். இந்த வேலையில் அவசரம் காட்ட முடியாது என்றும், அதனால் வரும் அனைத்து வேலைகளையும் அவர் ஏற்பதில்லை என்றும் கூறுகிறார்.

பரமசிவன் பல வருடங்களாக பொம்மைகளுக்கு புது உயிர் கொடுத்து வருகிறார். அவர் இந்த தொழிலில் கைதேர்ந்த நிபுணர். இப்போது சந்தைகளில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் பொம்மைகள் சராசரி தரம் மற்றும் கலைத் தகுதியில் மோசமானவை என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.

பரமசிவன் ஆண்டு முழுவதும் பிஸியாக இருக்கிறார்.

இந்த சீசனில் பரமசிவனின் மருமகன் முருகேசன் தங்கள் சேவையை விரிவுபடுத்த முடிவு செய்தார். தமிழ்நாட்டில் கடலூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற இடங்களில் கைவினைஞர்களால் செய்யப்பட்ட பொம்மைகளை வாங்கி வந்து இவரது கடையில் விற்பனையும் செய்கிறார்.

“நாங்கள் கலைஞர்கள் என்பதால், நன்கு தயாரிக்கப்பட்ட பொம்மைகளை கவனமாகத் தேர்ந்தெடுத்து இங்கே கொண்டு வந்து விற்பனை செய்கிறோம்,” என்கிறார் பரமசிவன்.

கடையில் உள்ள அலமாரிகளில் ஒரு வரையறுக்கப்பட்ட வகைகள் காட்சிக்கு மற்றும் விற்பனைக்கு உள்ளன. விலை ரூ.150ல் தொடங்குகிறது. பெரிய பொம்மைகளின் விலை ரூ.7,500 முதல் ரூ.10,000 வரைஉள்ளது.

மயிலாப்பூர் சித்திரகுளம் மேற்கு தெருவில் பரமசிவன் கடை உள்ளது. போன்:9841945161 / 7010727239.

மேலும் இவரது கடையின் வீடியோவை இங்கே பார்க்கவும் – https://www.youtube.com/watch?v=kv-3pYR8n10

admin

Recent Posts

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா. மே 21ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 28ல் தேர் திருவிழா.

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…

4 days ago

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருமான திரு. பி. வெங்கட்ரமணன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…

1 week ago

ஆர். ஏ. புரத்திலுள்ள டாஸ்மாக் ‘எலைட்’ கடையை மூட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை.

ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…

2 weeks ago

மந்தைவெளியில் உள்ள டாஸ்மாக் மது விற்பனைக் கடை நிரந்தரமாக மூடப்பட்டது.

மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…

2 weeks ago

இந்த டிரை கிளீனிங் வாகனம் வீட்டு வாசலுக்கே வந்து சேவை வழங்குகிறது.

உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…

2 weeks ago

தயாராகி வரும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரின் புதிய அலுவலகம்.

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…

2 weeks ago