உங்களது பழைய கொலு பொம்மைகளுக்கு வண்ணம் தீட்ட வேண்டுமா? இந்த கலைஞரிடம் கொண்டு செல்லுங்கள்.

சித்திரகுளம் குளத்தையொட்டி உள்ள சிறிய கடையின் மேற்கு பகுதியில் கொலு பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டி பழமை மாறாமல் அழகுபடுத்துபவர் கலைஞர் எஸ்.பரமசிவன். இந்த சீசனில் நீண்ட நேரம் வேலை செய்கிறார். ஏனென்றால், இந்த நேரத்தில் அவர் தேவையுள்ள ஒரு கலைஞர் – விண்டேஜ் பொம்மைகளை மீண்டும் வண்ணம் தீட்டக்கூடிய சில கலைஞர்களில் இவரும் ஒருவர்.

எனவே, வரும் நவராத்திரி விழாவை முன்னிட்டு, அவரது திறமையை நம்பும் மயிலாப்பூர்வாசிகள், தங்கள் குலதெய்வ பொம்மைகளுடன், இவரது கடைக்கு வருகின்றனர்.

போக்குவரத்து சத்தங்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளின் சத்தங்கள், எவற்றையும் பொருட்படுத்தாமல் அனுபவம் வாய்ந்த, தொழில்ரீதியாக பயிற்சி பெற்ற கலைஞர் பரமசிவன், கையில் இருக்கும் வேலையைச் செய்ய தனது நேரத்தை எடுத்துக்கொள்கிறார். இந்த வேலையில் அவசரம் காட்ட முடியாது என்றும், அதனால் வரும் அனைத்து வேலைகளையும் அவர் ஏற்பதில்லை என்றும் கூறுகிறார்.

பரமசிவன் பல வருடங்களாக பொம்மைகளுக்கு புது உயிர் கொடுத்து வருகிறார். அவர் இந்த தொழிலில் கைதேர்ந்த நிபுணர். இப்போது சந்தைகளில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் பொம்மைகள் சராசரி தரம் மற்றும் கலைத் தகுதியில் மோசமானவை என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.

பரமசிவன் ஆண்டு முழுவதும் பிஸியாக இருக்கிறார்.

இந்த சீசனில் பரமசிவனின் மருமகன் முருகேசன் தங்கள் சேவையை விரிவுபடுத்த முடிவு செய்தார். தமிழ்நாட்டில் கடலூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற இடங்களில் கைவினைஞர்களால் செய்யப்பட்ட பொம்மைகளை வாங்கி வந்து இவரது கடையில் விற்பனையும் செய்கிறார்.

“நாங்கள் கலைஞர்கள் என்பதால், நன்கு தயாரிக்கப்பட்ட பொம்மைகளை கவனமாகத் தேர்ந்தெடுத்து இங்கே கொண்டு வந்து விற்பனை செய்கிறோம்,” என்கிறார் பரமசிவன்.

கடையில் உள்ள அலமாரிகளில் ஒரு வரையறுக்கப்பட்ட வகைகள் காட்சிக்கு மற்றும் விற்பனைக்கு உள்ளன. விலை ரூ.150ல் தொடங்குகிறது. பெரிய பொம்மைகளின் விலை ரூ.7,500 முதல் ரூ.10,000 வரைஉள்ளது.

மயிலாப்பூர் சித்திரகுளம் மேற்கு தெருவில் பரமசிவன் கடை உள்ளது. போன்:9841945161 / 7010727239.

மேலும் இவரது கடையின் வீடியோவை இங்கே பார்க்கவும் – https://www.youtube.com/watch?v=kv-3pYR8n10

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago