ஓட்டுநர் பயிற்சி பெற்ற பெண்களுக்கு வேலைவாய்ப்பு: மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ திட்டம்

மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.நடராஜ் துவக்கிவைத்த திட்டத்தின் கீழ், வாகனம் ஓட்டும் பயிற்சி பெற்ற பெண்களுக்கு, ஆர்.டி.ஓ.வால் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் சமீபத்தில் வழங்கப்பட்டன.

இதன் நோக்கம் என்னவென்றால் இளம் பெண்களுக்கு ஆதாயமான வேலைவாய்ப்பை உறுதி செய்வதே என்கிறார் முன்னாள் எம்.எல்.ஏ நடராஜ்.

பெண்கள் ஓட்டுனர்களாக பணிபுரிய தயாராக உள்ளனர் என்றும், ஏற்கனவே மூன்று பேர் ஓட்டுனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சில பெண்கள் செகண்ட் ஹேண்ட், நல்ல கார்களை வாங்குவதற்கும், ஓலா அல்லது ஊபர் சேவைகளுடன் இணைந்து பணியாற்றவும் , கடன் வழங்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகியுள்ளதாக நடராஜ் கூறுகிறார்.

நடராஜ் கூறுகையில், இது நடப்பு திட்டம் என்றும், பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதில் அவ்வப்போது பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறினார்.

இந்த பெண்களின் ஓட்டுநர் சேவையை விரும்பும் மயிலாப்பூர்வாசிகள் நடராஜின் அலுவலக உதவியாளர் சதீஷை 7358-418871 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண் டிரைவருடன் அவர் உங்களை இணைப்பார்.

இது தன்வித்யா தீரஜ் வோரா அறக்கட்டளை, ஒற்றை ஆசிரியர் பள்ளி அறக்கட்டளை மற்றும் ராமகமலம் அறக்கட்டளை (நடராஜின் குடும்பத்தால் நிர்வகிக்கப்படுகிறது) ஆகியோரின் கூட்டு முயற்சியாகும்.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

3 days ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

3 days ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

2 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

3 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 months ago