ஸ்மார்ட் கொலுவை உருவாக்க மயிலாப்பூர் ட்ரையோவின் 8 குறிப்புகள். உங்கள் சொந்த குறிப்புகள் என்ன?

இப்போது நவராத்திரி சீசன், இன்னும் சில நாட்களில் நம்முடன் வரப் போகிறது, மேலும் பல குடும்பங்கள் தங்களின் சிறந்த கொலுவை உருவாக்கத் தயாராவர் என்பதால், கொலுவை அழகாக மாற்ற சில குறிப்புகள் இங்கே வழங்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் ட்ரையோ என்று அழைக்கப்படும் சுரேந்தர்நாத், அமர்நாத் மற்றும் அபர்ணா ஆகிய மூவரும் 2/3 அறைகள் நிறைந்த கொலு அமைப்பதில் பெயர் பெற்றவர்கள் அவர்களின் டிப்ஸ் இதோ.

1. லைட் கலர் ப்ளைன் அல்லது புட்டா பட்டுப் புடவைகளை கொலு படிகளில் உடுத்தலாம். ஆனால் அது போல்ஸ்களின் அழகை பாதிக்கக் கூடாது.

2. சக்ரா அல்லது பெரிய பூ வடிவங்கள் போன்ற சில பல்லு வடிவமைப்புகள் – பழைய புடவைகளிலிருந்து – கொலுவிற்கு விதானமாகப் பயன்படுத்தப்படலாம்.

3. பழைய பட்டு சேலை மற்றும் இரட்டை பக்க பார்டர் கொண்ட வேஷ்டியை கொலு படிக்கு பார்டர்களாக பயன்படுத்தலாம். இது ஒரு பெரிய மற்றும் ரிச் தோற்றத்தை அளிக்கும்.

4. எப்பொழுதும் முடிந்தவரை சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை பய்னபடுத்த முயற்சி செய்யுங்கள், இது எப்போதும் பாரம்பரியமான மற்றும் மங்களகரமான உணர்வைத் தரும்.

5. பாரம்பரிய கோரை பாயை பின்னணியாகவும் பக்கத்துளிகளாகவும் பயன்படுத்தலாம். இயற்கையான தொடுதலுடன் ஆக்கப்பூர்வமாக / புதுமையாக இருக்கும்.

6. கருப்பொருள் கொலுவுக்கு: பின்னணி காட்சிகள் / படங்கள் மதிப்பு சேர்க்கலாம் – பழைய காலெண்டர்கள், போஸ்டர்கள் போன்றவற்றிலிருந்து காட்சிகளைப் பயன்படுத்தவும்.

7. குளத்தில், கிணற்றில் நீர் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க நீல காகிதத்தையும், பனி மற்றும் மேகங்கள் போன்ற தோற்றத்தை உருவாக்க மருதுவமனையில் பயன்படுத்த கூடிய காட்டனை பயன்படுத்தவும்.

8. சில முக்கிய பொம்மைகளை முன்னிலைப்படுத்த, ஸ்டாண்டுகளை உருவாக்கி அவற்றை அங்கே வைக்கவும். வேஸ்ட் பொருட்கள், பல்வேறு அளவுகளில் பெட்டிகள் ஸ்டாண்டுகள் தயாரிக்க பயன்படும்.

கொலு அமைப்பது பற்றிய உங்களின் மூன்று டிப்ஸ்களை பகிர விரும்புகிறீர்களா? அவற்றை எங்களுடன் பகிரலாம்.

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

6 days ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

1 week ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

1 week ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

3 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

3 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

3 weeks ago