மத நிகழ்வுகள்

ஸ்மார்ட் கொலுவை உருவாக்க மயிலாப்பூர் ட்ரையோவின் 8 குறிப்புகள். உங்கள் சொந்த குறிப்புகள் என்ன?

இப்போது நவராத்திரி சீசன், இன்னும் சில நாட்களில் நம்முடன் வரப் போகிறது, மேலும் பல குடும்பங்கள் தங்களின் சிறந்த கொலுவை உருவாக்கத் தயாராவர் என்பதால், கொலுவை அழகாக மாற்ற சில குறிப்புகள் இங்கே வழங்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் ட்ரையோ என்று அழைக்கப்படும் சுரேந்தர்நாத், அமர்நாத் மற்றும் அபர்ணா ஆகிய மூவரும் 2/3 அறைகள் நிறைந்த கொலு அமைப்பதில் பெயர் பெற்றவர்கள் அவர்களின் டிப்ஸ் இதோ.

1. லைட் கலர் ப்ளைன் அல்லது புட்டா பட்டுப் புடவைகளை கொலு படிகளில் உடுத்தலாம். ஆனால் அது போல்ஸ்களின் அழகை பாதிக்கக் கூடாது.

2. சக்ரா அல்லது பெரிய பூ வடிவங்கள் போன்ற சில பல்லு வடிவமைப்புகள் – பழைய புடவைகளிலிருந்து – கொலுவிற்கு விதானமாகப் பயன்படுத்தப்படலாம்.

3. பழைய பட்டு சேலை மற்றும் இரட்டை பக்க பார்டர் கொண்ட வேஷ்டியை கொலு படிக்கு பார்டர்களாக பயன்படுத்தலாம். இது ஒரு பெரிய மற்றும் ரிச் தோற்றத்தை அளிக்கும்.

4. எப்பொழுதும் முடிந்தவரை சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை பய்னபடுத்த முயற்சி செய்யுங்கள், இது எப்போதும் பாரம்பரியமான மற்றும் மங்களகரமான உணர்வைத் தரும்.

5. பாரம்பரிய கோரை பாயை பின்னணியாகவும் பக்கத்துளிகளாகவும் பயன்படுத்தலாம். இயற்கையான தொடுதலுடன் ஆக்கப்பூர்வமாக / புதுமையாக இருக்கும்.

6. கருப்பொருள் கொலுவுக்கு: பின்னணி காட்சிகள் / படங்கள் மதிப்பு சேர்க்கலாம் – பழைய காலெண்டர்கள், போஸ்டர்கள் போன்றவற்றிலிருந்து காட்சிகளைப் பயன்படுத்தவும்.

7. குளத்தில், கிணற்றில் நீர் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க நீல காகிதத்தையும், பனி மற்றும் மேகங்கள் போன்ற தோற்றத்தை உருவாக்க மருதுவமனையில் பயன்படுத்த கூடிய காட்டனை பயன்படுத்தவும்.

8. சில முக்கிய பொம்மைகளை முன்னிலைப்படுத்த, ஸ்டாண்டுகளை உருவாக்கி அவற்றை அங்கே வைக்கவும். வேஸ்ட் பொருட்கள், பல்வேறு அளவுகளில் பெட்டிகள் ஸ்டாண்டுகள் தயாரிக்க பயன்படும்.

கொலு அமைப்பது பற்றிய உங்களின் மூன்று டிப்ஸ்களை பகிர விரும்புகிறீர்களா? அவற்றை எங்களுடன் பகிரலாம்.

admin

Recent Posts

மயிலாப்பூரில் நடைபெற்ற மகாராஷ்டிர தின நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…

3 hours ago

எம்.எல்.ஏ., ஸ்பான்சர்களுடன் சேர்ந்து, பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாமை நடத்துகிறார்.

மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…

7 hours ago

கோலங்கள் பற்றிய விரிவுரை. ஆர்.ஏ.புரத்தில் உள்ள கம்யூனிட்டி கிளப் நடத்தியது

சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…

1 day ago

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயிண்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் விடுமுறை பைபிள் பள்ளி

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…

1 day ago

மாதவப்பெருமாள் கோவிலில் சித்திரை திருவோணப் பெருவிழா – ஏப்ரல் 30 முதல் மே 10 வரை.

மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…

2 days ago

பி.எஸ்.மெட்ரிக் பள்ளியில் (வடக்கு) இந்த கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பில் வணிகவியல் பாடம் அறிமுகம்.

மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…

2 days ago