ஸ்மார்ட் கொலுவை உருவாக்க மயிலாப்பூர் ட்ரையோவின் 8 குறிப்புகள். உங்கள் சொந்த குறிப்புகள் என்ன?

இப்போது நவராத்திரி சீசன், இன்னும் சில நாட்களில் நம்முடன் வரப் போகிறது, மேலும் பல குடும்பங்கள் தங்களின் சிறந்த கொலுவை உருவாக்கத் தயாராவர் என்பதால், கொலுவை அழகாக மாற்ற சில குறிப்புகள் இங்கே வழங்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் ட்ரையோ என்று அழைக்கப்படும் சுரேந்தர்நாத், அமர்நாத் மற்றும் அபர்ணா ஆகிய மூவரும் 2/3 அறைகள் நிறைந்த கொலு அமைப்பதில் பெயர் பெற்றவர்கள் அவர்களின் டிப்ஸ் இதோ.

1. லைட் கலர் ப்ளைன் அல்லது புட்டா பட்டுப் புடவைகளை கொலு படிகளில் உடுத்தலாம். ஆனால் அது போல்ஸ்களின் அழகை பாதிக்கக் கூடாது.

2. சக்ரா அல்லது பெரிய பூ வடிவங்கள் போன்ற சில பல்லு வடிவமைப்புகள் – பழைய புடவைகளிலிருந்து – கொலுவிற்கு விதானமாகப் பயன்படுத்தப்படலாம்.

3. பழைய பட்டு சேலை மற்றும் இரட்டை பக்க பார்டர் கொண்ட வேஷ்டியை கொலு படிக்கு பார்டர்களாக பயன்படுத்தலாம். இது ஒரு பெரிய மற்றும் ரிச் தோற்றத்தை அளிக்கும்.

4. எப்பொழுதும் முடிந்தவரை சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை பய்னபடுத்த முயற்சி செய்யுங்கள், இது எப்போதும் பாரம்பரியமான மற்றும் மங்களகரமான உணர்வைத் தரும்.

5. பாரம்பரிய கோரை பாயை பின்னணியாகவும் பக்கத்துளிகளாகவும் பயன்படுத்தலாம். இயற்கையான தொடுதலுடன் ஆக்கப்பூர்வமாக / புதுமையாக இருக்கும்.

6. கருப்பொருள் கொலுவுக்கு: பின்னணி காட்சிகள் / படங்கள் மதிப்பு சேர்க்கலாம் – பழைய காலெண்டர்கள், போஸ்டர்கள் போன்றவற்றிலிருந்து காட்சிகளைப் பயன்படுத்தவும்.

7. குளத்தில், கிணற்றில் நீர் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க நீல காகிதத்தையும், பனி மற்றும் மேகங்கள் போன்ற தோற்றத்தை உருவாக்க மருதுவமனையில் பயன்படுத்த கூடிய காட்டனை பயன்படுத்தவும்.

8. சில முக்கிய பொம்மைகளை முன்னிலைப்படுத்த, ஸ்டாண்டுகளை உருவாக்கி அவற்றை அங்கே வைக்கவும். வேஸ்ட் பொருட்கள், பல்வேறு அளவுகளில் பெட்டிகள் ஸ்டாண்டுகள் தயாரிக்க பயன்படும்.

கொலு அமைப்பது பற்றிய உங்களின் மூன்று டிப்ஸ்களை பகிர விரும்புகிறீர்களா? அவற்றை எங்களுடன் பகிரலாம்.

admin

Recent Posts

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

11 hours ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

1 day ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

2 days ago

வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அக்ஷரா ப்ளே ஸ்கூல். புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் அக்ஷரா ப்ளே ஸ்கூல், சிறார்களின் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக 24 ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி, தற்போது…

2 days ago

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா. மே 21ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 28ல் தேர் திருவிழா.

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…

6 days ago

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருமான திரு. பி. வெங்கட்ரமணன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…

1 week ago