ஸ்மார்ட் கொலுவை உருவாக்க மயிலாப்பூர் ட்ரையோவின் 8 குறிப்புகள். உங்கள் சொந்த குறிப்புகள் என்ன?

இப்போது நவராத்திரி சீசன், இன்னும் சில நாட்களில் நம்முடன் வரப் போகிறது, மேலும் பல குடும்பங்கள் தங்களின் சிறந்த கொலுவை உருவாக்கத் தயாராவர் என்பதால், கொலுவை அழகாக மாற்ற சில குறிப்புகள் இங்கே வழங்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் ட்ரையோ என்று அழைக்கப்படும் சுரேந்தர்நாத், அமர்நாத் மற்றும் அபர்ணா ஆகிய மூவரும் 2/3 அறைகள் நிறைந்த கொலு அமைப்பதில் பெயர் பெற்றவர்கள் அவர்களின் டிப்ஸ் இதோ.

1. லைட் கலர் ப்ளைன் அல்லது புட்டா பட்டுப் புடவைகளை கொலு படிகளில் உடுத்தலாம். ஆனால் அது போல்ஸ்களின் அழகை பாதிக்கக் கூடாது.

2. சக்ரா அல்லது பெரிய பூ வடிவங்கள் போன்ற சில பல்லு வடிவமைப்புகள் – பழைய புடவைகளிலிருந்து – கொலுவிற்கு விதானமாகப் பயன்படுத்தப்படலாம்.

3. பழைய பட்டு சேலை மற்றும் இரட்டை பக்க பார்டர் கொண்ட வேஷ்டியை கொலு படிக்கு பார்டர்களாக பயன்படுத்தலாம். இது ஒரு பெரிய மற்றும் ரிச் தோற்றத்தை அளிக்கும்.

4. எப்பொழுதும் முடிந்தவரை சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை பய்னபடுத்த முயற்சி செய்யுங்கள், இது எப்போதும் பாரம்பரியமான மற்றும் மங்களகரமான உணர்வைத் தரும்.

5. பாரம்பரிய கோரை பாயை பின்னணியாகவும் பக்கத்துளிகளாகவும் பயன்படுத்தலாம். இயற்கையான தொடுதலுடன் ஆக்கப்பூர்வமாக / புதுமையாக இருக்கும்.

6. கருப்பொருள் கொலுவுக்கு: பின்னணி காட்சிகள் / படங்கள் மதிப்பு சேர்க்கலாம் – பழைய காலெண்டர்கள், போஸ்டர்கள் போன்றவற்றிலிருந்து காட்சிகளைப் பயன்படுத்தவும்.

7. குளத்தில், கிணற்றில் நீர் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க நீல காகிதத்தையும், பனி மற்றும் மேகங்கள் போன்ற தோற்றத்தை உருவாக்க மருதுவமனையில் பயன்படுத்த கூடிய காட்டனை பயன்படுத்தவும்.

8. சில முக்கிய பொம்மைகளை முன்னிலைப்படுத்த, ஸ்டாண்டுகளை உருவாக்கி அவற்றை அங்கே வைக்கவும். வேஸ்ட் பொருட்கள், பல்வேறு அளவுகளில் பெட்டிகள் ஸ்டாண்டுகள் தயாரிக்க பயன்படும்.

கொலு அமைப்பது பற்றிய உங்களின் மூன்று டிப்ஸ்களை பகிர விரும்புகிறீர்களா? அவற்றை எங்களுடன் பகிரலாம்.

admin

Recent Posts

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

24 hours ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

1 day ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

2 days ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 days ago

2026 சட்டப்பேரவை தேர்தல்: 25 பேர் வேட்புமனு தாக்கல்; நகரிலேயே இதுவே மிகக் குறைந்த எண்ணிக்கை.

ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக 25 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.…

6 days ago

தேர்தல் 2026: முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்.

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…

1 week ago