மந்தைவெளியில் புதிய மதுபான விற்பனை கடை அருகே போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Police-patrol-new-tasmacஇந்த பகுதியில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் எழுப்பிய பல புகார்களின் அடிப்படையில், தற்போது மந்தைவெளியில் உள்ள புதிய டாஸ்மாக் கடைக்கு அருகே போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடைக்கு வரும் மதுப்பிரியர்கள், தங்களுக்கு விருப்பமான இடத்தில் வாகனத்தை நிறுத்துவதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

ரோந்து வேனில் இருந்த போலீஸ் அதிகாரிகள், கடைக்கு செல்பவர்கள் அனைவரையும் தங்கள் மைக்கின் மூலம் எச்சரிக்கை செய்கின்றனர்.

எம்டிசி பஸ் டெப்போவைச் சுற்றியுள்ள இந்தப் பகுதியில் ஷாப்பிங் செய்யும் பெண்கள், இங்கு சாயங்காலத்திற்குப் பிறகு பாதுகாப்பற்றதாக இருப்பதாக புகார் கூறுகின்றனர்.

செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி

Verified by ExactMetrics