இயற்கையை கருப்பொருளாக கொண்ட கலாச்சார விழா பாரதிய வித்யா பவனில் அக்டோபர் 21 முதல்

பாரதிய வித்யா பவன், சென்னை கேந்திரா, ‘வாழிய வையகம்’ என்ற தலைப்பில் ஒரு வார கால கலாச்சார விழாவை நடத்துகிறது.

இது அக்டோபர் 21 முதல் 27 வரை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் சென்னை கேந்திராவில் நடைபெறுகிறது.

இந்த தனித்துவமான திருவிழாவில், இயற்கை உலகின் அழகு மற்றும் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சி ஆகியவை இடம்பெறும்.

தொடக்க விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

விழாவில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், நாடகம், இடம்பெறவுள்ளது.

அனைவரும் வரலாம்.

Verified by ExactMetrics