லஸ் சர்க்கிளைச் சுற்றி தங்கள் வியாபாரத்தை நடத்தி வந்த வியாபாரிகள், மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோயில் எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்குச் செல்லும் சாலையில் கடை அமைக்கத் தொடங்கியுள்ளனர்.
லஸ் பகுதியில் சென்னை மெட்ரோ பணிக்காக தடுப்புச் சுவர் அமைக்கப்பட்ட பிறகு, வியாபாரிகள் மாற்று வியாபார இடத்தைக் கேட்டு அவர்கள் போராட்டங்களை நடத்தினர்.
ஆனால் மெட்ரோ பணி விரிவடைந்து, கடைகள் அமைந்துள்ள லஸ் சர்ச் சாலையின் நடைபாதையில் சிக்கிக்கொண்டபோது, அவர்கள் அனைவரும் கடையை மூட வேண்டியிருந்தது.
கல்வி வாரு தெருவில் சில கடைகள் மைக்கப்பட்டன, ஆனால் உள்ளூர் சமூகம் ஆட்சேபித்ததால் அவற்றை அகற்ற வேண்டியிருந்தது.
எனவே, எம்ஆர்டிஎஸ் நிலையத்திலிருந்து வெளியேறும் சாலை ஸ்டால்கள் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டது, இந்த வாரம், சில கடைகள் வியாபாரத்திற்க்காக திறக்கப்பட்டது.
செய்தி: மதன் குமார்