ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு திறந்து வைத்தார்.
இரண்டு கோபுரங்களும் அனைத்து விமானங்களும் ஒளிரச் செய்யப்பட்டுள்ளன; விளக்குகளின் நிறங்கள் தானாகவே மாறும் வகையில் உள்ளது.
இரவில், தூரத்திலிருந்து பார்க்கும்போது, கோவிலுக்கு ஒரு அற்புதமான தோற்றத்தை விளக்குகள் தருகின்றன.
இந்த திட்டத்திற்காக சுமார் ரூ.2 கோடி செலவிடப்பட்டுள்ளது.
சில கோயில் பார்வையாளர்கள், சன்னிதி தெருவில் உள்ள கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ள 16 தூண் மண்டபத்தையும் ஒளிரச் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.
செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி.




