ஆர்.ஏ.புரத்தில் மெட்ராஸ் பற்றிய ஆவணப்படம் திரையிடல். ஆகஸ்டு 8.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு இசைக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள என்எப்டிசியின் தாகூர் ஆடிட்டோரியத்தில் ஆகஸ்டு 8 அன்று மாலையில் மெட்ராஸ் ற்றிய ஆவணப்படம் திரையிடப்பட உள்ளது.

90 நிமிடங்கள் உள்ள இந்த ஆவணப்படம் மாலை 6 மணிக்கு திரையிடப்படுகிறது.

INTACH இன் சென்னை பிரிவு தயாரித்து, சுஜாதா ஷங்கர் இயக்கிய இப்படத்திற்கான வசனத்தை மறைந்த வரலாற்றாசிரியர் எஸ். முத்தையா செய்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் எழுத்தாளரும் வரலாற்றாசிரியருமான பிரதீப் சக்ரவர்த்தி பேசுகிறார்.

அனைவரும் வரலாம்.

Verified by ExactMetrics