Categories: சமூகம்

போதைக்கு அடிமையாகி சிக்கித் தவிக்கும் இளைஞர்களை மீட்க ஒரு சமூகம் ஒன்றாக இணைந்துள்ளனர்.

மயிலாப்பூர் வாரன் சாலையில் உள்ள விசாலாட்சி தோட்டத்தில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி குடிசை மாற்று வாரியத்தால் உருவாக்கப்பட்டது. கடந்த ஒரு வருடமாக இங்கு வசித்து வரும் சில இளைஞர்கள் வேலை இல்லாமல் இருந்துள்ளனர். இவர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் கல்லூரி மற்றும் பள்ளி படிப்பு படித்து வரும் இளைஞர்கள் சில பேர் ஆன்லைன் வகுப்புகளை சரிவர செய்யாமல் குடிப்பழக்கத்துக்கு ஆளாகியுள்ளதாக இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் கூறுகின்றனர். இவர்கள் இரவு நேரங்களில் மதுபாட்டில்கள் வாங்கி தெருமுனைகளில் மது அருந்துவதாகவும், இதை பார்த்து இன்னும் சிலரும் இந்த மது பழக்கத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், சிலர் கஞ்சா பழக்கத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இது கவலை அளிக்கும் விதமாக உள்ளதாக இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் விசாலாட்சி தோட்டத்தில் உள்ள சமூக சேவை செய்யும் குழுவினர் அந்த பகுதியில் ஒரு கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்திற்கு மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது, அவரும் கூட்டத்திற்கு வந்திருந்தார். இளைஞர்கள் இந்த பழக்கங்களிலிருந்து விடுபடுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு தாங்கள் ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மதுபாட்டில்களில் உள்ள மதுவை கீழே ஊற்றி உறுதிமொழி எடுத்தனர். மேலும் இளைஞர்களின் குடிப்பழக்கத்தையும் கஞ்சா பழக்கத்தையும் ஒழிக்க அதை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உள்ளூர் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 days ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 days ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

3 days ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

3 days ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

4 days ago

நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்.

பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…

7 days ago