Categories: சமூகம்

போதைக்கு அடிமையாகி சிக்கித் தவிக்கும் இளைஞர்களை மீட்க ஒரு சமூகம் ஒன்றாக இணைந்துள்ளனர்.

மயிலாப்பூர் வாரன் சாலையில் உள்ள விசாலாட்சி தோட்டத்தில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி குடிசை மாற்று வாரியத்தால் உருவாக்கப்பட்டது. கடந்த ஒரு வருடமாக இங்கு வசித்து வரும் சில இளைஞர்கள் வேலை இல்லாமல் இருந்துள்ளனர். இவர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் கல்லூரி மற்றும் பள்ளி படிப்பு படித்து வரும் இளைஞர்கள் சில பேர் ஆன்லைன் வகுப்புகளை சரிவர செய்யாமல் குடிப்பழக்கத்துக்கு ஆளாகியுள்ளதாக இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் கூறுகின்றனர். இவர்கள் இரவு நேரங்களில் மதுபாட்டில்கள் வாங்கி தெருமுனைகளில் மது அருந்துவதாகவும், இதை பார்த்து இன்னும் சிலரும் இந்த மது பழக்கத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், சிலர் கஞ்சா பழக்கத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இது கவலை அளிக்கும் விதமாக உள்ளதாக இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் விசாலாட்சி தோட்டத்தில் உள்ள சமூக சேவை செய்யும் குழுவினர் அந்த பகுதியில் ஒரு கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்திற்கு மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது, அவரும் கூட்டத்திற்கு வந்திருந்தார். இளைஞர்கள் இந்த பழக்கங்களிலிருந்து விடுபடுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு தாங்கள் ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மதுபாட்டில்களில் உள்ள மதுவை கீழே ஊற்றி உறுதிமொழி எடுத்தனர். மேலும் இளைஞர்களின் குடிப்பழக்கத்தையும் கஞ்சா பழக்கத்தையும் ஒழிக்க அதை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உள்ளூர் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

6 days ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

1 week ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

1 week ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

3 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

3 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

3 weeks ago