சமூகம்

போதைக்கு அடிமையாகி சிக்கித் தவிக்கும் இளைஞர்களை மீட்க ஒரு சமூகம் ஒன்றாக இணைந்துள்ளனர்.

மயிலாப்பூர் வாரன் சாலையில் உள்ள விசாலாட்சி தோட்டத்தில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி குடிசை மாற்று வாரியத்தால் உருவாக்கப்பட்டது. கடந்த ஒரு வருடமாக இங்கு வசித்து வரும் சில இளைஞர்கள் வேலை இல்லாமல் இருந்துள்ளனர். இவர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் கல்லூரி மற்றும் பள்ளி படிப்பு படித்து வரும் இளைஞர்கள் சில பேர் ஆன்லைன் வகுப்புகளை சரிவர செய்யாமல் குடிப்பழக்கத்துக்கு ஆளாகியுள்ளதாக இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் கூறுகின்றனர். இவர்கள் இரவு நேரங்களில் மதுபாட்டில்கள் வாங்கி தெருமுனைகளில் மது அருந்துவதாகவும், இதை பார்த்து இன்னும் சிலரும் இந்த மது பழக்கத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், சிலர் கஞ்சா பழக்கத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இது கவலை அளிக்கும் விதமாக உள்ளதாக இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் விசாலாட்சி தோட்டத்தில் உள்ள சமூக சேவை செய்யும் குழுவினர் அந்த பகுதியில் ஒரு கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்திற்கு மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது, அவரும் கூட்டத்திற்கு வந்திருந்தார். இளைஞர்கள் இந்த பழக்கங்களிலிருந்து விடுபடுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு தாங்கள் ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மதுபாட்டில்களில் உள்ள மதுவை கீழே ஊற்றி உறுதிமொழி எடுத்தனர். மேலும் இளைஞர்களின் குடிப்பழக்கத்தையும் கஞ்சா பழக்கத்தையும் ஒழிக்க அதை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உள்ளூர் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

admin

Recent Posts

பழங்கால தமிழ் திரைப்பட ஹிட் பாடல்களின் கச்சேரி. மே 1. அனுமதி இலவசம்

பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…

22 hours ago

முத்துசுவாமி தீட்சிதருக்கு அஞ்சலி: தீம் மியூசிக்கல் ஷோ. ஏப்ரல் 28ல்.

மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…

22 hours ago

டாக்டர் சித்ரா மாதவன் உரை: தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள். ஏப்ரல் 27

தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…

23 hours ago

தற்கொலை செய்து கொண்ட ஒருவரை இழந்த மக்களுக்கு ஆதரவாக சேவையை தொடங்கும் SNEHA அமைப்பு.

ஆர்.ஏ புரத்தில் உள்ள SNEHA, தற்கொலை தடுப்பு சமூக அமைப்பானது, ஏப்ரல் 25 அன்று தற்கொலைக்குப் பிறகு ஆதரவு (SAS)…

3 days ago

இமயத்தின் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட நாடகம். ஏப்ரல் 27 மாலை. ஆழ்வார்பேட்டை

சாகித்ய அகாடமி வெற்றியாளர் இமயத்தின் தமிழ் சிறுகதைகளை தழுவி பிரசன்னா ராமசாமி இயக்கிய நாடக அரங்கேற்றம் ஏப்ரல் 27 அன்று…

3 days ago

சென்னை மெட்ரோ: திருமயிலை ரயில் நிலையம் அருகில் கால்வாய் பாலம் இருந்த பகுதியில் ஆழமான அகழாய்வு.

லஸ் மண்டலத்தில் பணிபுரியும் சென்னை மெட்ரோவின் ஒப்பந்ததாரர் திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையம் எதிரே உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில்…

3 days ago