வருடாந்திர ஓவிய விழா (Art Fest) சென்னை நிகழ்வு, தொற்றுநோய் காலங்களுக்குப் பிறகு, அதன் 2023ம் ஆண்டின் ஓவிய விழா பிப்ரவரியில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கலைஞர்கள், தொழில்முறை, செமி புரபஷனல் , அமெச்சூர் மற்றும் கலை மாணவர்கள் மற்றும் பதின்ம வயதினர் தங்கள் படைப்புகளைக் காண்பிப்பதற்காக நடத்தப்படுகிறது.
ஓவிய விழாவின் (Art Fest) இந்த பதிப்பு பிப்ரவரி 26, ஞாயிற்றுக்கிழமை சென்னை லஸ்ஸில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் நடைபெறும். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை. சுமார் 75 கலைஞர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்துவார்கள்.
இந்த நிகழ்வில் பங்கெடுக்க அழைக்கப்படுவதற்கு, நீங்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் (விண்ணப்பங்களை பிப்ரவரி 17, 2023க்குள் சமர்ப்பிக்க வேண்டும்) மேலும் உங்களுடைய மாதிரிகளின் (sample work) அடிப்படையில் ஏற்பாட்டாளர்கள் அழைப்பிதழ்களை அனுப்புவார்கள்.
டீன் ஏஜ் சிறார் கலைஞர்களும் பங்கேற்கலாம் ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களிடமிருந்து, ஒரு பொதுவான ஸ்டாலில் காட்சிப்படுத்த அமைப்பாளர் 2 படைப்புகளை மட்டுமே எடுப்பார்.
குறைந்த இடவசதி இருப்பதால் தேர்வு செயல்முறை இருக்கும். மேலும் விவரங்களை www.mylaporetimes.comல் பார்க்கவும்.
கோப்பு புகைப்படம்
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…
நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…
1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…