மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று ஆகஸ்ட் 5ம் தேதி வியாழக்கிழமை மாலை தமிழில் அர்ச்சனை செய்யும் வசதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். மேலும் இது போன்று மாநிலம் முழுவதும் சுமார் நாற்பது பெரியகோவில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். இந்த தமிழில் அர்ச்சனை செய்யும் நிகழ்ச்சி ஏற்கெனவே இருந்த நடைமுறைதான், தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு இது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இந்த வார இறுதியிலிருந்து பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். தமிழில் அர்ச்சனை செய்பவர்களின் விவரங்கள் தகவல்பலகையில் வெளியிடப்பட்டுள்ளது என்றும், தேவைப்படுபவர்கள் அவர்களை தொடர்புகொண்டு தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…