மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று ஆகஸ்ட் 5ம் தேதி வியாழக்கிழமை மாலை தமிழில் அர்ச்சனை செய்யும் வசதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். மேலும் இது போன்று மாநிலம் முழுவதும் சுமார் நாற்பது பெரியகோவில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். இந்த தமிழில் அர்ச்சனை செய்யும் நிகழ்ச்சி ஏற்கெனவே இருந்த நடைமுறைதான், தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு இது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இந்த வார இறுதியிலிருந்து பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். தமிழில் அர்ச்சனை செய்பவர்களின் விவரங்கள் தகவல்பலகையில் வெளியிடப்பட்டுள்ளது என்றும், தேவைப்படுபவர்கள் அவர்களை தொடர்புகொண்டு தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…
ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…
பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…
அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…