மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று ஆகஸ்ட் 5ம் தேதி வியாழக்கிழமை மாலை தமிழில் அர்ச்சனை செய்யும் வசதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். மேலும் இது போன்று மாநிலம் முழுவதும் சுமார் நாற்பது பெரியகோவில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். இந்த தமிழில் அர்ச்சனை செய்யும் நிகழ்ச்சி ஏற்கெனவே இருந்த நடைமுறைதான், தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு இது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இந்த வார இறுதியிலிருந்து பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். தமிழில் அர்ச்சனை செய்பவர்களின் விவரங்கள் தகவல்பலகையில் வெளியிடப்பட்டுள்ளது என்றும், தேவைப்படுபவர்கள் அவர்களை தொடர்புகொண்டு தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…