 போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக், சமீபத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டான், சாதிக்கிற்கு சாந்தோமில் தொடர்பு இருந்தது.
போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக், சமீபத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டான், சாதிக்கிற்கு சாந்தோமில் தொடர்பு இருந்தது.
அவனது வீடு மற்றும் அலுவலகம் இந்த மண்டலத்தில் அமைந்துள்ளது; டெல்லி குடோனில் கைது செய்யப்பட்டவர்கள், கூறிய தகவல்களின் அடிப்படையில் ஏற்றுமதி செய்யவிருந்த போதைப்பொருட்களை கடந்தவாரம் NCB அதிகாரிகள் முறியடித்தனர்.
தப்பியோடிய சாதிக் மேற்கு இந்தியாவில் கைது செய்யப்பட்டார்.
சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் வர்த்தகத்தின் பின்னணியில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது. திரைப்படங்கள் தயாரிப்பது உட்பட பல தொழில்களில் ஏராளமான பணத்தை முதலீடு செய்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்காரன் என்று அவரது பெயர் அடிபடும் தருணத்தில், அவர் திமுகவின் நகர NRI பிரிவில் பதவி வகித்தவர் என்பது தெரிந்தது. இந்த கைதை தொடர்ந்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
அதற்குள், சாதிக், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்களுடன் இருக்கும் புகைப்பட காட்சிகள் மற்றும் விஐபிகளுடன் திரைப்பட விழாக்களில் அவர் இருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது..




