மழை தொடர்வதால், மந்தைவெளி சீத்தம்மாள் காலனியில், மாநகராட்சி பணியாளர்கள் பணியைத் தொடர்கின்றனர்.

நவம்பர் 29, இன்று திங்கட்கிழமை காலை மழை அதன் வேலையை காட்டியது. ஆனால் மயிலாப்பூரில் ‘சிவப்பு’ மண்டலங்களில், இந்த பருவமழையால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்கள் தங்கள் வேலையைத் தொடர்ந்தனர்.

தேவநாதன் தெருவில், குடிமராமத்து பணிகளுக்காக வாகன போக்குவரத்து குறைக்கப்பட்டுள்ளது. இந்த காலனியில் வெள்ளம் தவிர தண்ணீரை மாசுபடுத்தும் கழிவு நீரும் தெருக்கள் வழியாக வீடுகளுக்குள் புகுந்தது.

ஆழ்வார்பேட்டை சீத்தம்மாள் காலனியில், டி.டி.கே சாலை சந்திப்பில் பொருத்தப்பட்டுள்ள உயர் சக்தி பம்புகள் வழியாக தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றும் பணி தொடர்கிறது. பம்புகளில் இருந்து வரும் குழாய்கள் காலனியின் பிரதான சாலையின் குறுக்கே போடப்பட்டுள்ளன.

இந்தக் காலனியின் நடைபாதையில் பைபர் கிளாஸ் படகு ஒன்று வைக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது. மழை வெள்ளம் அதிகமானால் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட வேண்டியிருந்தால் இந்த பைபர் கிளாஸ் படகு பயன்படுத்தப்படும்.

<< நீங்கள் இந்தப் பகுதிகளில் வசிப்பவராக இருந்தால், இங்குள்ள நிலைமையைப் பற்றி எங்களுக்குத் கீழே உள்ள கருத்து பெட்டி வழியாக தெரிவிக்கவும். >>

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

4 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

4 weeks ago