இந்த உணவகத்தில் சாப்பிட வரும் வாடிக்கையாளர்களைவிட உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் ஊழியர்கள் அதிகம் வருகின்றனர்.

உணவகங்களில் கொஞ்ச நாட்களாக வியாபாரம் குறைவாகவே நடைபெறுகிறது. எடுத்துக்காட்டாக பட்டினப்பாக்கம் சங்கீதா உணவகம் சில வாரங்களுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் நேற்று இந்த உணவகத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவு கூட வாடிக்கையாளர்கள் வரவில்லை. இங்கு கூட்டம் எப்பொழுதும் நிறைந்து காணப்படும். அதே நேரத்தில் இங்கு ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் நிறைய ஆர்டர்களை பெறுகின்றன.

கொரோனா தொற்றால் மக்கள் உணவகங்களுக்கு நேரிடையாக செல்வதில்லை. எனவே ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு விற்பனை அதிகரித்துள்ளது. ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட தெருக்களில் இருந்து ஆர்டர்கள் வந்தால் ஊழியர்கள் உணவுகளை வீட்டு வாயிலில் (கேட் அருகே) மட்டுமே டெலிவரி செய்வார்கள் என்று தெரிவிக்கின்றனர். நாளை முழு ஊரடங்கு மற்றும் பெரும்பாலான உணவகங்கள் மூடி இருக்கும் என்பதால் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் சங்கீதா உணவகத்தில் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்குகின்றனர்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago