மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் தனது வருடாந்திர டிசம்பர் சீசன் இசை விழாவை இன்று மாலை தொடங்கியது – ஆனால் வேறு இடத்தில் – கீழ்ப்பாக்கத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் கார்டன் சாலையில் உள்ள ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில் தொடங்கியது. இந்த புதிய இடமானது வைரஸ் தொற்று காலத்தின் விதிமுறைக்கு ஏற்ப திறந்த வெளி மைதானம். ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து ஒவ்வொரு நாளும் மாலையில், இசையை ரசிக்கலாம். ரசிகர்கள் தங்கள் கார்களில் உட்கார்ந்து கொண்டும் இசையை கேட்டு ரசிக்கலாம். இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். இந்த விழா டிசம்பர் 19 வரை நடைபெறுகிறது, இதில் T.M. கிருஷ்ணா, விஜய் சிவா, P.உன்னிகிருஷ்ணன், ராமகிருஷ்ண மூர்த்தி, காயத்ரி வெங்கடராகவன் மற்றும் விசாகா ஹரி போன்ற கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். தினசரி, ஒரே ஒரு கச்சேரி மட்டும் நடைபெறுகிறது. இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ரசிகரக்ள் வைரஸ் தொற்று நேர விதிகளை பின்பற்ற வேண்டும், மேலும் ரசிகர்கள் அனைவரும் முகமூடி அணிந்து வரவேண்டும்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…