மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் தனது வருடாந்திர டிசம்பர் சீசன் இசை விழாவை இன்று மாலை தொடங்கியது – ஆனால் வேறு இடத்தில் – கீழ்ப்பாக்கத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் கார்டன் சாலையில் உள்ள ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில் தொடங்கியது. இந்த புதிய இடமானது வைரஸ் தொற்று காலத்தின் விதிமுறைக்கு ஏற்ப திறந்த வெளி மைதானம். ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து ஒவ்வொரு நாளும் மாலையில், இசையை ரசிக்கலாம். ரசிகர்கள் தங்கள் கார்களில் உட்கார்ந்து கொண்டும் இசையை கேட்டு ரசிக்கலாம். இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். இந்த விழா டிசம்பர் 19 வரை நடைபெறுகிறது, இதில் T.M. கிருஷ்ணா, விஜய் சிவா, P.உன்னிகிருஷ்ணன், ராமகிருஷ்ண மூர்த்தி, காயத்ரி வெங்கடராகவன் மற்றும் விசாகா ஹரி போன்ற கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். தினசரி, ஒரே ஒரு கச்சேரி மட்டும் நடைபெறுகிறது. இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ரசிகரக்ள் வைரஸ் தொற்று நேர விதிகளை பின்பற்ற வேண்டும், மேலும் ரசிகர்கள் அனைவரும் முகமூடி அணிந்து வரவேண்டும்.
காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…
ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…
மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…
தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…