மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனின் வருடாந்திர டிசம்பர் சீசன் இசை விழா தொடங்கியது

மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் தனது வருடாந்திர டிசம்பர் சீசன் இசை விழாவை இன்று மாலை தொடங்கியது – ஆனால் வேறு இடத்தில் – கீழ்ப்பாக்கத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் கார்டன் சாலையில் உள்ள ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில் தொடங்கியது. இந்த புதிய இடமானது வைரஸ் தொற்று காலத்தின் விதிமுறைக்கு ஏற்ப திறந்த வெளி மைதானம். ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து ஒவ்வொரு நாளும் மாலையில், இசையை ரசிக்கலாம். ரசிகர்கள் தங்கள் கார்களில் உட்கார்ந்து கொண்டும் இசையை கேட்டு ரசிக்கலாம். இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். இந்த விழா டிசம்பர் 19 வரை நடைபெறுகிறது, இதில் T.M. கிருஷ்ணா, விஜய் சிவா, P.உன்னிகிருஷ்ணன், ராமகிருஷ்ண மூர்த்தி, காயத்ரி வெங்கடராகவன் மற்றும் விசாகா ஹரி போன்ற கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். தினசரி, ஒரே ஒரு கச்சேரி மட்டும் நடைபெறுகிறது. இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ரசிகரக்ள் வைரஸ் தொற்று நேர விதிகளை பின்பற்ற வேண்டும், மேலும் ரசிகர்கள் அனைவரும் முகமூடி அணிந்து வரவேண்டும்.

admin

Recent Posts

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

4 days ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

1 month ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 months ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 months ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 months ago