மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் தனது வருடாந்திர டிசம்பர் சீசன் இசை விழாவை இன்று மாலை தொடங்கியது – ஆனால் வேறு இடத்தில் – கீழ்ப்பாக்கத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் கார்டன் சாலையில் உள்ள ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில் தொடங்கியது. இந்த புதிய இடமானது வைரஸ் தொற்று காலத்தின் விதிமுறைக்கு ஏற்ப திறந்த வெளி மைதானம். ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து ஒவ்வொரு நாளும் மாலையில், இசையை ரசிக்கலாம். ரசிகர்கள் தங்கள் கார்களில் உட்கார்ந்து கொண்டும் இசையை கேட்டு ரசிக்கலாம். இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். இந்த விழா டிசம்பர் 19 வரை நடைபெறுகிறது, இதில் T.M. கிருஷ்ணா, விஜய் சிவா, P.உன்னிகிருஷ்ணன், ராமகிருஷ்ண மூர்த்தி, காயத்ரி வெங்கடராகவன் மற்றும் விசாகா ஹரி போன்ற கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். தினசரி, ஒரே ஒரு கச்சேரி மட்டும் நடைபெறுகிறது. இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ரசிகரக்ள் வைரஸ் தொற்று நேர விதிகளை பின்பற்ற வேண்டும், மேலும் ரசிகர்கள் அனைவரும் முகமூடி அணிந்து வரவேண்டும்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…