மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வகையான குடியிருப்புகள் உள்ளது. முதலாவது குப்பம் பகுதிகள் மற்றும் அதற்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், இரண்டாவது பழமையான மயிலாப்பூர் சந்துகளில் உள்ள வீடுகள், மூன்றாவது வசதியானவர்கள் மற்றும் பலதரப்பட்ட மக்கள் வாழும் பகுதிகள் உள்ளது. இங்கு முதல் இரண்டு இடங்களில் உள்ள மக்களை வேட்பாளர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பது எளிது. மூன்றாம் இடத்தில் வசிக்கும் மக்களை சந்திக்க அந்த மக்கள் வெளியில் செல்லும் இடங்களுக்கு சென்று வாக்கு சேகரிப்பது கொஞ்சம் கஷ்டம். அந்த வகையில் இன்று காலை அமமுக வேட்பாளர் கார்த்திக் லஸ் அருகே உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவிற்கு நடைப்பயிற்சி செய்ய சென்றார். அப்போது பூங்காவிற்கு நடைப்பயிற்சி மற்றும் இதர பயிற்சிகள் செய்ய வந்த வந்த மக்களை நேரிடையாக சந்தித்து வாக்கு சேகரித்தார்.
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…
தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…