மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வகையான குடியிருப்புகள் உள்ளது. முதலாவது குப்பம் பகுதிகள் மற்றும் அதற்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், இரண்டாவது பழமையான மயிலாப்பூர் சந்துகளில் உள்ள வீடுகள், மூன்றாவது வசதியானவர்கள் மற்றும் பலதரப்பட்ட மக்கள் வாழும் பகுதிகள் உள்ளது. இங்கு முதல் இரண்டு இடங்களில் உள்ள மக்களை வேட்பாளர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பது எளிது. மூன்றாம் இடத்தில் வசிக்கும் மக்களை சந்திக்க அந்த மக்கள் வெளியில் செல்லும் இடங்களுக்கு சென்று வாக்கு சேகரிப்பது கொஞ்சம் கஷ்டம். அந்த வகையில் இன்று காலை அமமுக வேட்பாளர் கார்த்திக் லஸ் அருகே உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவிற்கு நடைப்பயிற்சி செய்ய சென்றார். அப்போது பூங்காவிற்கு நடைப்பயிற்சி மற்றும் இதர பயிற்சிகள் செய்ய வந்த வந்த மக்களை நேரிடையாக சந்தித்து வாக்கு சேகரித்தார்.
ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…