மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வகையான குடியிருப்புகள் உள்ளது. முதலாவது குப்பம் பகுதிகள் மற்றும் அதற்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், இரண்டாவது பழமையான மயிலாப்பூர் சந்துகளில் உள்ள வீடுகள், மூன்றாவது வசதியானவர்கள் மற்றும் பலதரப்பட்ட மக்கள் வாழும் பகுதிகள் உள்ளது. இங்கு முதல் இரண்டு இடங்களில் உள்ள மக்களை வேட்பாளர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பது எளிது. மூன்றாம் இடத்தில் வசிக்கும் மக்களை சந்திக்க அந்த மக்கள் வெளியில் செல்லும் இடங்களுக்கு சென்று வாக்கு சேகரிப்பது கொஞ்சம் கஷ்டம். அந்த வகையில் இன்று காலை அமமுக வேட்பாளர் கார்த்திக் லஸ் அருகே உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவிற்கு நடைப்பயிற்சி செய்ய சென்றார். அப்போது பூங்காவிற்கு நடைப்பயிற்சி மற்றும் இதர பயிற்சிகள் செய்ய வந்த வந்த மக்களை நேரிடையாக சந்தித்து வாக்கு சேகரித்தார்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…