பேராலயங்களில் கிறிஸ்துமஸ் முதல் நாள் நடைபெறும் இரவு நேர பூசைகளின் நேரங்கள் மாற்றம்.

கிறிஸ்துமஸ் முதல் நாள் இரவு பேராலயங்களில் மிகவும் பிரமாண்டமாக பூசைகள் நடக்கும். ஆனால் இந்த வருடம் இந்த பூசைகள் கொரோனா விதிமுறைகளின் காரணமாக பேராலயங்களில் காலை நேரத்தில் நடத்தவிருக்கின்றனர். காலை 6 மணி முதல் 9 மணி வரை வெவ்வேறு நேரங்களில் நடத்துகின்றனர்.

சாந்தோம் பேராலயத்தில் இன்று மாலை 6.45 மணிக்கு ஆங்கிலத்தில் பூசைகள் நடக்கவுள்ளது. மேலும் தமிழில் பூசைகள் இரவு 11.30மணிக்கு நடைபெறவுள்ளது. வழக்கமாக தமிழ் பூசைகளில் கலந்து கொள்வதற்காக நகரில் வெவ்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கலந்துகொள்வார்கள். ஆனால் இந்த வருடம் உள்ளூரில் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் மட்டும் கலந்து கொள்ள அவர்களுக்கு பேராலய நிர்வாகம் டோக்கன் வழங்கியுள்ளது. எனவே இன்று இரவு நடக்கவிருக்கும் தமிழ் பூசையில் டோக்கன் வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நாளை பெரும்பாலான பேராலயங்களில் இரண்டு அல்லது மூன்று தமிழ் மற்றும் ஆங்கில பூசைகள் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago