சென்னை மெட்ரோ: டிசம்பர் 10 முதல் கச்சேரி சாலை பகுதியில் முக்கிய போக்குவரத்து மாற்றம்

சென்னை மெட்ரோ ரயில் மேற்கொண்டுள்ள பணிகளைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 10 சனிக்கிழமை முதல் கச்சேரி சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் போக்குவரத்து மாற்றங்களை சென்னை போக்குவரத்து காவல்துறை செயல்படுத்துகிறது. இது ஒரு வாரம் சோதனை அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 16 வரை.

மிக முக்கியமாக, கார்கள், பேருந்துகள் மற்றும் வேன்கள் லஸ் சர்க்கிள் முனையிலிருந்து சாந்தோம் கதீட்ரல் முனை வரை வழக்கம்போல் செல்லமுடியாது.

இந்த பகுதியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் விவரங்கள்:

1. முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தெருவில் இருந்து கச்சேரி சாலைக்கு வாகனங்கள் செல்வதைக் கட்டுப்படுத்தும் வகையில் கல்விவாரு தெருவில் தற்போதுள்ள ஒருவழிப்பாதை அமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது; கச்சேரி சாலையில் இருந்து முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தெருவுக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

2. லஸ் ஜங்ஷனிலிருந்து கச்சேரி சாலை வழியாக சாந்தோம் நெடுஞசாலைக்கு செல்லும் இலகுரக மோட்டார் வாகனங்கள் தடை செய்யப்பட்டு கல்விவாரு தெரு, முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தெரு மற்றும் பஜார் சாலையில் திருப்பி விடப்படும்.

3. சாந்தோமில் இருந்து கச்சேரி சாலை வழியாக லஸ் நோக்கி செல்லும் இலகுரக மோட்டார் வாகனங்கள் தடை செய்யப்பட்டு தேவடி தெரு, நடுத்தெரு, ஆர் கே மட சாலை (அல்லது) மாதா சர்ச் சாலை மற்றும் ஆர் கே மட சாலையில் திருப்பி விடப்படுகின்றன.

4. சென்னை மாநகர பேருந்து எண். 12Bயின் இயக்கம் – லஸ்ஸிலிருந்து பட்டினப்பாக்கம் பேருந்து முனையத்திற்கு கச்சேரி சாலை வழியாக தடைசெய்யப்பட்டு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, டாக்டர். ஆர்.கே.சாலை மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்பட்டுகிறது.

5. MTC பேருந்து 12X இயக்கம் – லஸ்ஸிலிருந்து பட்டினப்பாக்கம் பேருந்து முனையத்திற்கு கச்சேரி சாலை வழியாக தடைசெய்யப்பட்டு ஆர்.கே.மட ரோடு மற்றும் சவுத் கெனால் பேங்க் ரோட்டில் திருப்பி விடப்பட்டு, திரும்பும் வழியில் மந்தைவெளி பேருந்து நிலையம் வரை, வழக்கம் போல் இயங்கி வெங்கடகிருஷ்ணா சாலை மற்றும் ஆர் கே மட சாலை வழியாக செல்லும்.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

10 hours ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

2 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

3 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

5 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

7 days ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago