ஆர்.ஏ.புரத்திலுள்ள சென்னை மாநகராட்சியின் விளையாட்டு மைதானத்தில் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டு வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுவருகிறது. விளையாட்டு மைதானத்தின் பெரும்பகுதியை மெட்ரோ நிறுவனம் எடுத்துள்ளது. இங்கு சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மைதானத்தின் முகப்பில் பொதுமக்கள் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் தற்போது அலுவலக நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இன்னும் பணிகள் துரிதமாக செயல்பாட்டுக்கு வரும் போது மேலும் போக்குவரத்துக்கு நெரிசல் அதிகரிக்கும். இந்த மெட்ரோ வழித்தடம் வடசென்னையில் தொடங்கி சோழிங்கநல்லூர் வரை அமைக்கப்படவுள்ளது. இந்த மெட்ரோ ரயிலின் வேலைகளுக்கு சுரங்கம் தோண்டும் பணி மாநகராட்சியின் விளையாட்டு மைதானத்திலிருந்து தொடங்கப்படவுள்ளதாக மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…