ஆர்.ஏ.புரத்திலுள்ள சென்னை மாநகராட்சியின் விளையாட்டு மைதானத்தில் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டு வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுவருகிறது. விளையாட்டு மைதானத்தின் பெரும்பகுதியை மெட்ரோ நிறுவனம் எடுத்துள்ளது. இங்கு சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மைதானத்தின் முகப்பில் பொதுமக்கள் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் தற்போது அலுவலக நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இன்னும் பணிகள் துரிதமாக செயல்பாட்டுக்கு வரும் போது மேலும் போக்குவரத்துக்கு நெரிசல் அதிகரிக்கும். இந்த மெட்ரோ வழித்தடம் வடசென்னையில் தொடங்கி சோழிங்கநல்லூர் வரை அமைக்கப்படவுள்ளது. இந்த மெட்ரோ ரயிலின் வேலைகளுக்கு சுரங்கம் தோண்டும் பணி மாநகராட்சியின் விளையாட்டு மைதானத்திலிருந்து தொடங்கப்படவுள்ளதாக மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…
நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…
1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…