சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாவது திட்டத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை இயக்க திட்டம் தீட்டப்பட்டிருந்தது. கடந்த மூன்று வருடங்களாக இந்த வழி தடத்தை செயல்படுத்த ஆய்வு பணிகள் மேற்கொண்டபோது கச்சேரி ரோடு, லஸ் சர்ச் ரோடு, ஆழ்வார்பேட்டை போன்ற பகுதிகளில் பூமிக்கு அடியில் வழித்தடங்கள் சென்றாலும் தனியாருக்கு சொந்தமான நிறைய இடங்கள் அடிபடுவதாக செய்திகள் வந்தது. பின்னர் மக்கள் நிறைய கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தினர். ஆனால் தற்போது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் சிறியதாக சில மாற்றங்கள் செய்துள்ளதாகவும், இதனால் மிகவும் குறைந்த அளவே தனியார் இடங்கள் இந்த திட்டத்தில் அடிபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மெட்ரோ இரயில் வேலைகளை அரசுக்கு சொந்தமான இடங்களில் செய்யவிருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்த செய்தி இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வரவேற்க கூடியதாக உள்ளது. அதே நேரத்தில் இன்னும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்திடமிருந்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்த திட்டத்தை தற்போது செயல்படுத்த தொடங்கினால் கச்சேரி சாலை மற்றும் லஸ் போன்ற பகுதிகளில் வாகனப்போக்குவரத்து தடைபடும். மற்றும் இந்த பகுதிகளில் கடைகள் வைத்திருப்போர் ஏற்கனெவே கொரோனாவினால் வியாபாரம் இல்லாமல் இருக்கின்றனர். இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது மேலும் வியாபாரம் பாதிக்கப்படும்.
தமிழ்நாடு மாஸ்டர்ஸ் மாநில டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை சமீபத்தில் மந்தை வெளிப்பாக்கம் அல்போன்சா மைதானத்தில் உள்ள ஜி.சி.சி உட்புற மைதானத்தில்…
மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. (இந்த இடம் பொதுவாக…
மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளை குடிமைப் பணியாளர்கள்…
பெண்களுக்கான யோகா இலவச அனுபவம்; அடிப்படை பயிற்சி மந்தைவெளியில் உள்ள யோகா ஃபார் வெல்னஸ் ஸ்டுடியோவில். மார்ச் 8 காலை.…
காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…
ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…