செய்திகள்

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாவது திட்டத்தில் சிறிய அளவிலான மாற்றங்கள். மயிலாப்பூரில் தனியார் இடங்களுக்கு பாதிப்பில்லை.

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாவது திட்டத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை இயக்க திட்டம் தீட்டப்பட்டிருந்தது. கடந்த மூன்று வருடங்களாக இந்த வழி தடத்தை செயல்படுத்த ஆய்வு பணிகள் மேற்கொண்டபோது கச்சேரி ரோடு, லஸ் சர்ச் ரோடு, ஆழ்வார்பேட்டை போன்ற பகுதிகளில் பூமிக்கு அடியில் வழித்தடங்கள் சென்றாலும் தனியாருக்கு சொந்தமான நிறைய இடங்கள் அடிபடுவதாக செய்திகள் வந்தது. பின்னர் மக்கள் நிறைய கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தினர். ஆனால் தற்போது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் சிறியதாக சில மாற்றங்கள் செய்துள்ளதாகவும், இதனால் மிகவும் குறைந்த அளவே தனியார் இடங்கள் இந்த திட்டத்தில் அடிபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மெட்ரோ இரயில் வேலைகளை அரசுக்கு சொந்தமான இடங்களில் செய்யவிருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்த செய்தி இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வரவேற்க கூடியதாக உள்ளது. அதே நேரத்தில் இன்னும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்திடமிருந்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்த திட்டத்தை தற்போது செயல்படுத்த தொடங்கினால் கச்சேரி சாலை மற்றும் லஸ் போன்ற பகுதிகளில் வாகனப்போக்குவரத்து தடைபடும். மற்றும் இந்த பகுதிகளில் கடைகள் வைத்திருப்போர் ஏற்கனெவே கொரோனாவினால் வியாபாரம் இல்லாமல் இருக்கின்றனர். இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது மேலும் வியாபாரம் பாதிக்கப்படும்.

admin

Recent Posts

பெண் குழந்தைகளை ஆதரிக்கும் சேமிப்புத் திட்டத்தை பிரபலப்படுத்த மயிலாப்பூர் தபால் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…

1 month ago

ஆர்.ஏ.புரம் கல்யாண மண்டபத்தில் 30 ஜோடிகளுக்கு ‘சுயமரியாதை கல்யாணம்’ நடத்திய தி.மு.க.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…

2 months ago

சென்னை மெட்ரோ: ஆர்.எச். சாலையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…

2 months ago

சிட்டி சென்டர் மாலில் பாட்டில் ஆர்ட் வேடிக்கை நிகழ்ச்சி. பிப்ரவரி 16 வரை.

மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…

2 months ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தெப்ப விழா; கோயில் குளத்திற்குள் பணிகள் தொடங்கியது.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…

2 months ago