சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாவது திட்டத்தில் சிறிய அளவிலான மாற்றங்கள். மயிலாப்பூரில் தனியார் இடங்களுக்கு பாதிப்பில்லை.

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாவது திட்டத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை இயக்க திட்டம் தீட்டப்பட்டிருந்தது. கடந்த மூன்று வருடங்களாக இந்த வழி தடத்தை செயல்படுத்த ஆய்வு பணிகள் மேற்கொண்டபோது கச்சேரி ரோடு, லஸ் சர்ச் ரோடு, ஆழ்வார்பேட்டை போன்ற பகுதிகளில் பூமிக்கு அடியில் வழித்தடங்கள் சென்றாலும் தனியாருக்கு சொந்தமான நிறைய இடங்கள் அடிபடுவதாக செய்திகள் வந்தது. பின்னர் மக்கள் நிறைய கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தினர். ஆனால் தற்போது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் சிறியதாக சில மாற்றங்கள் செய்துள்ளதாகவும், இதனால் மிகவும் குறைந்த அளவே தனியார் இடங்கள் இந்த திட்டத்தில் அடிபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மெட்ரோ இரயில் வேலைகளை அரசுக்கு சொந்தமான இடங்களில் செய்யவிருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்த செய்தி இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வரவேற்க கூடியதாக உள்ளது. அதே நேரத்தில் இன்னும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்திடமிருந்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்த திட்டத்தை தற்போது செயல்படுத்த தொடங்கினால் கச்சேரி சாலை மற்றும் லஸ் போன்ற பகுதிகளில் வாகனப்போக்குவரத்து தடைபடும். மற்றும் இந்த பகுதிகளில் கடைகள் வைத்திருப்போர் ஏற்கனெவே கொரோனாவினால் வியாபாரம் இல்லாமல் இருக்கின்றனர். இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது மேலும் வியாபாரம் பாதிக்கப்படும்.

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

2 weeks ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

1 month ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 months ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago