சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாவது திட்டத்தில் சிறிய அளவிலான மாற்றங்கள். மயிலாப்பூரில் தனியார் இடங்களுக்கு பாதிப்பில்லை.

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாவது திட்டத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை இயக்க திட்டம் தீட்டப்பட்டிருந்தது. கடந்த மூன்று வருடங்களாக இந்த வழி தடத்தை செயல்படுத்த ஆய்வு பணிகள் மேற்கொண்டபோது கச்சேரி ரோடு, லஸ் சர்ச் ரோடு, ஆழ்வார்பேட்டை போன்ற பகுதிகளில் பூமிக்கு அடியில் வழித்தடங்கள் சென்றாலும் தனியாருக்கு சொந்தமான நிறைய இடங்கள் அடிபடுவதாக செய்திகள் வந்தது. பின்னர் மக்கள் நிறைய கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தினர். ஆனால் தற்போது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் சிறியதாக சில மாற்றங்கள் செய்துள்ளதாகவும், இதனால் மிகவும் குறைந்த அளவே தனியார் இடங்கள் இந்த திட்டத்தில் அடிபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மெட்ரோ இரயில் வேலைகளை அரசுக்கு சொந்தமான இடங்களில் செய்யவிருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்த செய்தி இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வரவேற்க கூடியதாக உள்ளது. அதே நேரத்தில் இன்னும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்திடமிருந்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்த திட்டத்தை தற்போது செயல்படுத்த தொடங்கினால் கச்சேரி சாலை மற்றும் லஸ் போன்ற பகுதிகளில் வாகனப்போக்குவரத்து தடைபடும். மற்றும் இந்த பகுதிகளில் கடைகள் வைத்திருப்போர் ஏற்கனெவே கொரோனாவினால் வியாபாரம் இல்லாமல் இருக்கின்றனர். இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது மேலும் வியாபாரம் பாதிக்கப்படும்.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 days ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

3 days ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

3 weeks ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

3 weeks ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

3 weeks ago