சென்னை மெட்ரோ: தற்காலிக பேருந்து நிறுத்தங்களில் பேருந்து வழித்தட எண்கள் அடங்கிய பலகைகளை வைத்துள்ளது. பயணிகள் நிழற்குடைகளை எதிர்பார்க்கின்றனர்.

எம்டிசி இறுதியாக, சென்னை மெட்ரோ பணியின் காரணமாக மயிலப்பூர் பகுதியில் பேருந்து மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மயிலாப்பூர்வாசிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்துள்ளது.

நேற்றிரவு முதல், மயிலாப்பூர் – மந்தைவெளி – அபிராமபுரம் பகுதிகளில் உருவாக்கப்பட்ட அனைத்து ‘தற்காலிக பேருந்து நிறுத்தங்களிலும்’ இப்போது நிறுத்தங்கள் மற்றும் பேருந்து வழித்தட எண்களை பட்டியலிடும் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது..

ஆனால், கோடை வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ள நிலையில், தற்காலிக பேருந்து நிழற்குடைகள் அமைப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

லஸ் சர்ச் சாலையின் மேற்கு மூலையில், கற்பகாம்பாள் நகர் போன்ற இடங்களில், பயணிகளுக்கு அவென்யூவில் உள்ள மரங்களால் கொஞ்சம் நிழல் கிடைக்கிறது.

ஆனால் ஸ்ரீனிவாசா அவென்யூவின் கிழக்கு முனை, ஆர்.ஏ.புரம் போன்ற இடங்களில் மக்கள் பேருந்துகளுக்காக வெயிலில் நிற்கிறார்கள் அல்லது உள்ளூர் கடைகளின் வாசலில் உள்ள நிழலில் நிற்கிறார்கள்.

மயிலாப்பூர் டைம்ஸிலிருந்து ‘புதிதாக மாற்றப்பட்ட பேருந்து வழித்தட வரைபடங்கள்’ மற்றும் புதிய பேருந்து நிறுத்தங்கள் போன்ற விவரங்களை வேண்டி எம்டிசிக்கு அனுப்பப்பட்ட பல செய்திகளுக்கு ‘வழங்குகிறோம்’ என்ற பதில் மட்டுமே கிடைத்தது.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

4 days ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

5 days ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

5 days ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

5 days ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

6 days ago

நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்.

பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…

1 week ago