செய்திகள்

சென்னை மெட்ரோ: தற்காலிக பேருந்து நிறுத்தங்களில் பேருந்து வழித்தட எண்கள் அடங்கிய பலகைகளை வைத்துள்ளது. பயணிகள் நிழற்குடைகளை எதிர்பார்க்கின்றனர்.

எம்டிசி இறுதியாக, சென்னை மெட்ரோ பணியின் காரணமாக மயிலப்பூர் பகுதியில் பேருந்து மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மயிலாப்பூர்வாசிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்துள்ளது.

நேற்றிரவு முதல், மயிலாப்பூர் – மந்தைவெளி – அபிராமபுரம் பகுதிகளில் உருவாக்கப்பட்ட அனைத்து ‘தற்காலிக பேருந்து நிறுத்தங்களிலும்’ இப்போது நிறுத்தங்கள் மற்றும் பேருந்து வழித்தட எண்களை பட்டியலிடும் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது..

ஆனால், கோடை வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ள நிலையில், தற்காலிக பேருந்து நிழற்குடைகள் அமைப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

லஸ் சர்ச் சாலையின் மேற்கு மூலையில், கற்பகாம்பாள் நகர் போன்ற இடங்களில், பயணிகளுக்கு அவென்யூவில் உள்ள மரங்களால் கொஞ்சம் நிழல் கிடைக்கிறது.

ஆனால் ஸ்ரீனிவாசா அவென்யூவின் கிழக்கு முனை, ஆர்.ஏ.புரம் போன்ற இடங்களில் மக்கள் பேருந்துகளுக்காக வெயிலில் நிற்கிறார்கள் அல்லது உள்ளூர் கடைகளின் வாசலில் உள்ள நிழலில் நிற்கிறார்கள்.

மயிலாப்பூர் டைம்ஸிலிருந்து ‘புதிதாக மாற்றப்பட்ட பேருந்து வழித்தட வரைபடங்கள்’ மற்றும் புதிய பேருந்து நிறுத்தங்கள் போன்ற விவரங்களை வேண்டி எம்டிசிக்கு அனுப்பப்பட்ட பல செய்திகளுக்கு ‘வழங்குகிறோம்’ என்ற பதில் மட்டுமே கிடைத்தது.

admin

Recent Posts

மயிலாப்பூர் ஆர்.கே.மட சாலையில் நேச்சுரல் சலூன் திறப்பு.

ஸ்பா தெரபி முதல் ஹேர் ஸ்டைலிங் சேவைகள் வரை, இந்த நன்கு வடிவமைக்கப்பட்ட சலூன் அனைத்தையும் வழங்குகிறது. இதன் உரிமையாளர்…

22 hours ago

ஆழ்வார்பேட்டை ரவுண்டானாவில் புதிய காபி மற்றும் சிற்றுண்டி கடை

மெட்ராஸ் காபி ஹவுஸ் முசிறி சுப்ரமணியம் சாலையில் (ஒரு காலத்தில் ஆலிவர் சாலை என்று அழைக்கப்பட்டது) ஆழ்வார்பேட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர்…

2 days ago

சிஐடி காலனியில் உள்ள இந்த பள்ளியில் ப்ரீகேஜி மாணவர் சேர்க்கை தொடங்கியது.

உமா நாராயணன் நடத்தும் சிஐடி காலனியில் உள்ள தி நெஸ்ட் பள்ளியில் ப்ரீ கேஜி வகுப்புகளுக்கான சேர்க்கை இப்போது திறக்கப்பட்டுள்ளது.…

2 days ago

பாரதியார் பற்றிய சந்திப்பு நிகழ்ச்சி. மே 13 மாலை

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் பாரதிய வித்யா பவன் இணைந்து மே 13 அன்று மாலை 6.30 மணிக்கு பாரதிய…

4 days ago

மந்தைவெளியில் உள்ள இந்த முட்டுச்சந்தின் தெரு மூலையானது குடிமகன்கள் மது அருந்த பயன்படுத்துகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

மந்தைவெளியில் உள்ள சீனிவாசன் தெருவில் வசிக்கும் மக்கள், இந்த முட்டுச்சந்து உள்ள தெருவை இரவு நேரங்களில் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும்…

5 days ago

படவா கோபியின் நகைச்சுவை நிகழ்ச்சி

நகைச்சுவை மற்றும் நடிகரான படவா கோபி மே 11 அன்று மாலை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள மேடை -…

5 days ago