செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான ‘மைத்ரி’ கலாச்சார விழா.

தொற்றுநோய் காரணமாக இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு, ‘மைத்ரி’எனப்படும் பள்ளிகளுக்கிடையேயான கலாச்சார விழாவில் பல நகரப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த மேடையேறியதால், செட்டிநாடு வித்யாஷ்ரம் வளாகம் இரண்டு நாட்களாக அதிர்ந்தது.

செப்., 9 மற்றும் 10ம் தேதிகளில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர், நிர்வாகம் மற்றும் செட்டிநாடு வித்யாஷ்ரம் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

பள்ளி மாணவத தலைவர்கள் முஸ்தபா டோபிவாலா, சௌமியா நாராயணன் ஆகியோர் தலைமையில் கௌரி ஞானனி, கிஷிதா தாகா, மானசா அரவிந்தன் மற்றும் கலாசாரச் செயலர்கள் மெகா நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

‘மைத்ரி 2022’ இன் தொடக்க விழாவில், விருந்தினராக நடிகர் மற்றும் அரசியல்வாதி குஷ்பூ சுந்தர், பிரியா ராமன், சுபஸ்ரீ தணிகாசலம் மற்றும் இளவரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறிப்பிட்ட எட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் சாம்பியன் ஆஃப் சாம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர்.

பாரதிய வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த பிரதீஷன் வெற்றிபெற்று ‘மிஸ்டர் மைத்ரி’ பட்டம் பெற்றார். மதிப்புமிக்க ஓவர்-ஆல் வெற்றியாளர் கோப்பையை எஸ்பிஒஏ பள்ளி கைப்பற்றியது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். விருதுகளை நடிகர்கள் அமிதாஷ் மற்றும் யாஷிகா ஆகியோர் வழங்கினர்.

இந்த செய்தி பள்ளியின் தகவல்தொடர்பு அடிப்படையிலானது.

admin

Recent Posts

சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) கூடுகிறது. குழந்தைகளுக்கான கதை சொல்லும் போட்டியை நடத்துகிறது.

மயிலாப்பூரில் சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 8 அன்று லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் குழந்தைகளுக்கான…

1 day ago

மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் அட்டை பதிவு செய்ய கூட்டமாக இருந்தால், கோபாலபுரத்தில் உள்ள துணை அஞ்சல் அலுவலகத்தை அணுகலாம்.

குழந்தைகள் அனைவரும் ஆதார் அட்டை பெற வேண்டும் என்பதால், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் நீண்ட வரிசையில்…

1 day ago

தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய எளிய முறையைப் பயன்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…

3 days ago

புதிய கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் பள்ளி இருக்கும் பகுதிகள் மீண்டும் பரபரப்பாக இருந்தது.

நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…

3 days ago

இந்த லயன்ஸ் கிளப் மந்தைவெளியில் கணித பயிற்சி மையத்தை நடத்துகிறது. ஏழை மாணவர்களுக்கு இலவசம்

லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…

3 days ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வைகாசி விழா தொடங்கியது

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…

3 days ago