செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான ‘மைத்ரி’ கலாச்சார விழா.

தொற்றுநோய் காரணமாக இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு, ‘மைத்ரி’எனப்படும் பள்ளிகளுக்கிடையேயான கலாச்சார விழாவில் பல நகரப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த மேடையேறியதால், செட்டிநாடு வித்யாஷ்ரம் வளாகம் இரண்டு நாட்களாக அதிர்ந்தது.

செப்., 9 மற்றும் 10ம் தேதிகளில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர், நிர்வாகம் மற்றும் செட்டிநாடு வித்யாஷ்ரம் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

பள்ளி மாணவத தலைவர்கள் முஸ்தபா டோபிவாலா, சௌமியா நாராயணன் ஆகியோர் தலைமையில் கௌரி ஞானனி, கிஷிதா தாகா, மானசா அரவிந்தன் மற்றும் கலாசாரச் செயலர்கள் மெகா நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

‘மைத்ரி 2022’ இன் தொடக்க விழாவில், விருந்தினராக நடிகர் மற்றும் அரசியல்வாதி குஷ்பூ சுந்தர், பிரியா ராமன், சுபஸ்ரீ தணிகாசலம் மற்றும் இளவரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறிப்பிட்ட எட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் சாம்பியன் ஆஃப் சாம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர்.

பாரதிய வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த பிரதீஷன் வெற்றிபெற்று ‘மிஸ்டர் மைத்ரி’ பட்டம் பெற்றார். மதிப்புமிக்க ஓவர்-ஆல் வெற்றியாளர் கோப்பையை எஸ்பிஒஏ பள்ளி கைப்பற்றியது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். விருதுகளை நடிகர்கள் அமிதாஷ் மற்றும் யாஷிகா ஆகியோர் வழங்கினர்.

இந்த செய்தி பள்ளியின் தகவல்தொடர்பு அடிப்படையிலானது.

Verified by ExactMetrics