சாந்தோம் அம்மா உணவகம் பின்புறம் சென்னை மாநகராட்சியின் இன்பினிட்டி பார்க் உள்ளது. இந்த பூங்கா காது கேளாதோரும் மற்றும் பார்வையற்றோரும் உடல் ஊனமுற்றோரும் மற்றும் மனவளர்ச்சி குன்றியோரும் பயன்படுத்த உருவாக்கப்பட்டது. இந்த பூங்காவில் மேற்கண்ட மாற்றுத்திறனாளிகள் உணரும் வகையில் சில விதமான டிசைன்கள் மற்றும் பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவர்கள் இங்கு வந்து விளையாடி மகிழ்கின்றனர். மேலும் இந்த பகுதியில் உள்ள சாதாரண மக்களையும் இந்த பூங்காவிற்குள் அனுமதிக்கின்றனர்.
பூங்கா காவலாளி மணி, கிறிஸ்துமஸ் விழாவுக்காக பொம்மைகளுடன் கூடிய ஒரு சிறிய கிறிஸ்துமஸ் குடிலை அமைத்து பூங்கா கேட் அருகே வைத்துள்ளார். மேலும் மணி அனைத்து மத விழாக்களையும் மதிப்பதாகவும் மற்றும் இந்த கிறிஸ்துமஸ் குடிலை அவருடன் வேலை செய்யும் இருவர் சேர்ந்து சொந்த செலவில் உருவாக்கியதாக தெரிவிக்கிறார். சிறிய குழந்தைகள் இந்த குடிலை பார்த்து மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளதாக தெரிவிக்கிறார். இவர் இங்கு சுமார் ஒன்றரை வருடமாக காவலாளியாக உள்ளார். இந்த பூங்கா சென்னை மாநகராட்சியின் பூங்கா. இந்த பூங்காவை அப்பாசாமி பில்டர்ஸ் பராமரித்து வருகின்றனர்.
<< நீங்கள் அழகாக உள்ள இந்த பூங்காவை இதுவரை பார்க்கவில்லை என்றால் தற்போது சென்று பாருங்கள்>>
காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…
ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…
மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…
தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…