இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிறிய கிறிஸ்துமஸ் குடிலை பார்த்து குழந்தைகள் சந்தோஷப்படுகின்றனர்.

சாந்தோம் அம்மா உணவகம் பின்புறம் சென்னை மாநகராட்சியின் இன்பினிட்டி பார்க் உள்ளது. இந்த பூங்கா காது கேளாதோரும் மற்றும் பார்வையற்றோரும் உடல் ஊனமுற்றோரும் மற்றும் மனவளர்ச்சி குன்றியோரும் பயன்படுத்த உருவாக்கப்பட்டது. இந்த பூங்காவில் மேற்கண்ட மாற்றுத்திறனாளிகள் உணரும் வகையில் சில விதமான டிசைன்கள் மற்றும் பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவர்கள் இங்கு வந்து விளையாடி மகிழ்கின்றனர். மேலும் இந்த பகுதியில் உள்ள சாதாரண மக்களையும் இந்த பூங்காவிற்குள் அனுமதிக்கின்றனர்.

பூங்கா காவலாளி மணி, கிறிஸ்துமஸ் விழாவுக்காக பொம்மைகளுடன் கூடிய ஒரு சிறிய கிறிஸ்துமஸ் குடிலை அமைத்து பூங்கா கேட் அருகே வைத்துள்ளார். மேலும் மணி அனைத்து மத விழாக்களையும் மதிப்பதாகவும் மற்றும் இந்த கிறிஸ்துமஸ் குடிலை அவருடன் வேலை செய்யும் இருவர் சேர்ந்து சொந்த செலவில் உருவாக்கியதாக தெரிவிக்கிறார். சிறிய குழந்தைகள் இந்த குடிலை பார்த்து மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளதாக தெரிவிக்கிறார். இவர் இங்கு சுமார் ஒன்றரை வருடமாக காவலாளியாக உள்ளார். இந்த பூங்கா சென்னை மாநகராட்சியின் பூங்கா. இந்த பூங்காவை அப்பாசாமி பில்டர்ஸ் பராமரித்து வருகின்றனர்.

<< நீங்கள் அழகாக உள்ள இந்த பூங்காவை இதுவரை பார்க்கவில்லை என்றால் தற்போது சென்று பாருங்கள்>>

admin

Recent Posts

அக்னி நட்சத்திரத்துடன் தொடர்புடைய இந்த கோவிலுக்கு விழாவின் இறுதி நிகழ்வாக காய்கறிகள் மற்றும் பழங்களை பக்தர்கள் நன்கொடையாக வழங்குகிறார்கள்.

கேசவபெருமாள்புரம், கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ. புரம், ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்ன பாவடை விழா சமீபத்தில்…

2 days ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் (தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)…

3 days ago

‘டூரிஸ்ட் ஃபேமிலி’, பிரபல தமிழ் திரைப்படம், இன்று (மே 30) ஆர் ஆர் சபாவில் திரையிடப்படுகிறது

மயிலாப்பூர், ஆர் ஆர் சபாவில் மே 30, இன்று வெள்ளிக்கிழமை, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற தமிழ் திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த…

4 days ago

பி.எஸ். உயர்நிலைப் பள்ளி (வடக்கு) 1977 பேட்ச், எஸ்.எஸ்.எல்.சி (11 ‘ஏ’ பிரிவு) ஆண்களின் சந்திப்பு நிகழ்ச்சி.

பி.எஸ். உயர்நிலைப் பள்ளி (வடக்கு) 1977 பேட்ச் எஸ்.எஸ்.எல்.சி (11 'ஏ' பிரிவு) 'பழைய மாணவர்கள்' சமீபத்தில் மயிலாப்பூரில் உள்ள…

4 days ago

மறுசுழற்சி சவால்: மயிலாப்பூர் குழுக்கள்/குடியிருப்பாளர்கள் பதிவு செய்ய அழைப்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5 அன்று நடைபெறும் ‘மயிலையை மறுசுழற்சி செய்தல் - 21 நாள் சவால்’…

4 days ago

ராணி மேரி கல்லூரிக்கு புதிய விடுதி

ராணி மேரி கல்லூரி வளாகத்தில் இப்போது ஒரு புதிய விடுதி துவங்கப்பட்டுள்ளது. முதல்வர் எம்.கே. ஸ்டாலின் மே 21 அன்று…

5 days ago