சாந்தோம் அம்மா உணவகம் பின்புறம் சென்னை மாநகராட்சியின் இன்பினிட்டி பார்க் உள்ளது. இந்த பூங்கா காது கேளாதோரும் மற்றும் பார்வையற்றோரும் உடல் ஊனமுற்றோரும் மற்றும் மனவளர்ச்சி குன்றியோரும் பயன்படுத்த உருவாக்கப்பட்டது. இந்த பூங்காவில் மேற்கண்ட மாற்றுத்திறனாளிகள் உணரும் வகையில் சில விதமான டிசைன்கள் மற்றும் பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவர்கள் இங்கு வந்து விளையாடி மகிழ்கின்றனர். மேலும் இந்த பகுதியில் உள்ள சாதாரண மக்களையும் இந்த பூங்காவிற்குள் அனுமதிக்கின்றனர்.
பூங்கா காவலாளி மணி, கிறிஸ்துமஸ் விழாவுக்காக பொம்மைகளுடன் கூடிய ஒரு சிறிய கிறிஸ்துமஸ் குடிலை அமைத்து பூங்கா கேட் அருகே வைத்துள்ளார். மேலும் மணி அனைத்து மத விழாக்களையும் மதிப்பதாகவும் மற்றும் இந்த கிறிஸ்துமஸ் குடிலை அவருடன் வேலை செய்யும் இருவர் சேர்ந்து சொந்த செலவில் உருவாக்கியதாக தெரிவிக்கிறார். சிறிய குழந்தைகள் இந்த குடிலை பார்த்து மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளதாக தெரிவிக்கிறார். இவர் இங்கு சுமார் ஒன்றரை வருடமாக காவலாளியாக உள்ளார். இந்த பூங்கா சென்னை மாநகராட்சியின் பூங்கா. இந்த பூங்காவை அப்பாசாமி பில்டர்ஸ் பராமரித்து வருகின்றனர்.
<< நீங்கள் அழகாக உள்ள இந்த பூங்காவை இதுவரை பார்க்கவில்லை என்றால் தற்போது சென்று பாருங்கள்>>
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…