ஆர்.ஏ.புரத்தில் தேவாலயம் நடத்தி வரும் தொடக்கப்பள்ளி புதுப்பிக்கப்பட்டது.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள பாத்திமா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி அவர் லேடி ஆஃப் கைடன்ஸ் சர்ச்சுடன் இணைக்கப்பட்டது. தேவாலயத்தின் பங்குத்தந்தை ஒய்.எப்.போஸ்கோ, இந்த
பள்ளியின் தாளாளர்.

இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளன. இந்த வளாகத்தில் செயின்ட் லாசரஸ் மண்டபத்திற்கு சற்று மேலே 10 வகுப்பறைகள் உள்ளன.

புதிய கழிப்பறைகள் கட்டப்பட்டு, புதிதாக பெயின்ட் அடிக்கப்பட்டு, தரை மற்றும் கூரையும் புதுப்பிக்கப்பட்டு, சிறந்த காற்றோட்டத்திற்காக புதிய ஜன்னல்கள் வைக்கப்பட்டு இந்த பள்ளி புதுப்பிக்கப்பட்டது. இப்பணி கடந்த 3 மாதங்களாக நடந்து வந்தது என பள்ளியின் பாதிரியார் தெரிவித்தார்.

புதுப்பிக்கப்பட்ட பள்ளி, கடந்த வாரம் சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளியின் நிர்வாகி மற்றும் பாதிரியார் ஜேசுதாஸ் SDB அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

பங்குத்தந்தை லூர்துஸ் மார்செல், உதவி பங்குத்தந்தை மற்றும் சகோதரர் சதீஷ் மற்றும் ஆசிரியர்களும் சில மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பள்ளி தலைமையாசிரியை ஜூலி கூறுகையில், தற்போது இப்பள்ளியில் 208 மாணவர்கள் உள்ளதாகவும், 2022 – 2023 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை எல்.கே.ஜி.யில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்

admin

Recent Posts

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

3 days ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

1 month ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

1 month ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 months ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 months ago