ஆர்.ஏ.புரத்தில் உள்ள பாத்திமா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி அவர் லேடி ஆஃப் கைடன்ஸ் சர்ச்சுடன் இணைக்கப்பட்டது. தேவாலயத்தின் பங்குத்தந்தை ஒய்.எப்.போஸ்கோ, இந்த
பள்ளியின் தாளாளர்.
இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளன. இந்த வளாகத்தில் செயின்ட் லாசரஸ் மண்டபத்திற்கு சற்று மேலே 10 வகுப்பறைகள் உள்ளன.
புதிய கழிப்பறைகள் கட்டப்பட்டு, புதிதாக பெயின்ட் அடிக்கப்பட்டு, தரை மற்றும் கூரையும் புதுப்பிக்கப்பட்டு, சிறந்த காற்றோட்டத்திற்காக புதிய ஜன்னல்கள் வைக்கப்பட்டு இந்த பள்ளி புதுப்பிக்கப்பட்டது. இப்பணி கடந்த 3 மாதங்களாக நடந்து வந்தது என பள்ளியின் பாதிரியார் தெரிவித்தார்.
புதுப்பிக்கப்பட்ட பள்ளி, கடந்த வாரம் சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளியின் நிர்வாகி மற்றும் பாதிரியார் ஜேசுதாஸ் SDB அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
பங்குத்தந்தை லூர்துஸ் மார்செல், உதவி பங்குத்தந்தை மற்றும் சகோதரர் சதீஷ் மற்றும் ஆசிரியர்களும் சில மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பள்ளி தலைமையாசிரியை ஜூலி கூறுகையில், தற்போது இப்பள்ளியில் 208 மாணவர்கள் உள்ளதாகவும், 2022 – 2023 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை எல்.கே.ஜி.யில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…