ஆர்.ஏ.புரத்தில் தேவாலயம் நடத்தி வரும் தொடக்கப்பள்ளி புதுப்பிக்கப்பட்டது.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள பாத்திமா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி அவர் லேடி ஆஃப் கைடன்ஸ் சர்ச்சுடன் இணைக்கப்பட்டது. தேவாலயத்தின் பங்குத்தந்தை ஒய்.எப்.போஸ்கோ, இந்த
பள்ளியின் தாளாளர்.

இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளன. இந்த வளாகத்தில் செயின்ட் லாசரஸ் மண்டபத்திற்கு சற்று மேலே 10 வகுப்பறைகள் உள்ளன.

புதிய கழிப்பறைகள் கட்டப்பட்டு, புதிதாக பெயின்ட் அடிக்கப்பட்டு, தரை மற்றும் கூரையும் புதுப்பிக்கப்பட்டு, சிறந்த காற்றோட்டத்திற்காக புதிய ஜன்னல்கள் வைக்கப்பட்டு இந்த பள்ளி புதுப்பிக்கப்பட்டது. இப்பணி கடந்த 3 மாதங்களாக நடந்து வந்தது என பள்ளியின் பாதிரியார் தெரிவித்தார்.

புதுப்பிக்கப்பட்ட பள்ளி, கடந்த வாரம் சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளியின் நிர்வாகி மற்றும் பாதிரியார் ஜேசுதாஸ் SDB அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

பங்குத்தந்தை லூர்துஸ் மார்செல், உதவி பங்குத்தந்தை மற்றும் சகோதரர் சதீஷ் மற்றும் ஆசிரியர்களும் சில மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பள்ளி தலைமையாசிரியை ஜூலி கூறுகையில், தற்போது இப்பள்ளியில் 208 மாணவர்கள் உள்ளதாகவும், 2022 – 2023 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை எல்.கே.ஜி.யில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்

admin

Recent Posts

மயிலாப்பூரில் ஜூனியர்களுக்கான செஸ் போட்டி

64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…

11 hours ago

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் பழுதுபார்ப்புக்காக மூடப்பட்டது.

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…

11 hours ago

ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டோ உதிரிபாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல்.

மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…

11 hours ago

வில்லிவாக்கத்தில் குடும்பத்தினருடன் ‘காணாமல் போன நபர்’ மீண்டும் இணைந்தார்.

மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…

1 day ago

மயிலாப்பூர் ஆன்லைன் சமூகக் குழுக்களில் பகிரப்பட்ட ‘நபர் காணவில்லை’ என்ற செய்தி.

இந்த புதன்கிழமை நண்பகல் முதல் ‘நபர் காணவில்லை’ என்ற ஆன்லைன் செய்தி பரவி வருகிறது. இதுதான் செய்தி – மந்தைவெளிப்பாக்கம்…

1 day ago

தொல்காப்பிய பூங்காவில், பணிகள் இன்னும் நடந்து வருவதால் விடுமுறை நாட்களில் வரும் கூட்டத்தை இழந்துள்ளது.

மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…

2 days ago