ஆர்.ஏ.புரத்தில் தேவாலயம் நடத்தி வரும் தொடக்கப்பள்ளி புதுப்பிக்கப்பட்டது.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள பாத்திமா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி அவர் லேடி ஆஃப் கைடன்ஸ் சர்ச்சுடன் இணைக்கப்பட்டது. தேவாலயத்தின் பங்குத்தந்தை ஒய்.எப்.போஸ்கோ, இந்த
பள்ளியின் தாளாளர்.

இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளன. இந்த வளாகத்தில் செயின்ட் லாசரஸ் மண்டபத்திற்கு சற்று மேலே 10 வகுப்பறைகள் உள்ளன.

புதிய கழிப்பறைகள் கட்டப்பட்டு, புதிதாக பெயின்ட் அடிக்கப்பட்டு, தரை மற்றும் கூரையும் புதுப்பிக்கப்பட்டு, சிறந்த காற்றோட்டத்திற்காக புதிய ஜன்னல்கள் வைக்கப்பட்டு இந்த பள்ளி புதுப்பிக்கப்பட்டது. இப்பணி கடந்த 3 மாதங்களாக நடந்து வந்தது என பள்ளியின் பாதிரியார் தெரிவித்தார்.

புதுப்பிக்கப்பட்ட பள்ளி, கடந்த வாரம் சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளியின் நிர்வாகி மற்றும் பாதிரியார் ஜேசுதாஸ் SDB அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

பங்குத்தந்தை லூர்துஸ் மார்செல், உதவி பங்குத்தந்தை மற்றும் சகோதரர் சதீஷ் மற்றும் ஆசிரியர்களும் சில மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பள்ளி தலைமையாசிரியை ஜூலி கூறுகையில், தற்போது இப்பள்ளியில் 208 மாணவர்கள் உள்ளதாகவும், 2022 – 2023 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை எல்.கே.ஜி.யில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

2 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

2 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

2 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

4 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

4 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

4 weeks ago