நகர சபை தேர்தல்கள்: தீவிரமடையும் தேர்தல் பிரச்சாரங்கள்

பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நகரசபை உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் பரபரப்பான முறையில் நடைபெற்று வருகிறது, இது மயிலாப்பூரில் உள்ள உள் காலனிகளில், அதிக மக்கள் தொகை கொண்ட மண்டலங்களில் தெளிவாகத் தெரிகிறது.

நேற்று மாலை, 124வது வார்டுக்கான மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் சசிகலா, மயிலாப்பூரின் மையப்பகுதியில், வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்களையும், பின்னர் குடியிருப்பாளர்களையும் சந்தித்து வாக்கு சேகரித்தார். (புகைப்படம் கீழே)

திமுகவின் மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவும் திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் மற்றும் சிபிஐ-எம் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களுக்காக பரபரப்பான மற்றும் நீண்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். (புகைப்படம் கீழே)

இந்த மண்டலத்தில் வார்டுக்கு வார்டு பிரச்சாரம் செய்துகொண்டே அவர் திறந்த வெளியில் சுற்றிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. ஒரு கட்டத்தில், அவர் ஜீப்பில், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக கட்சிகளின் தொண்டர்கள் தலைமையில், வார்டு 123 இல் சிபிஐ-எம் இன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சரஸ்வதியுடன் பிரச்சாரம் செய்தார்.

மாநிலத் தேர்தல் ஆணையம் இப்போது சிறிய ஊர்வலங்கள் மற்றும் தெருக் கூட்டங்களை நடத்த அனுமதித்துள்ளதால், மேலும் பிரச்சாரத்திற்கான காலக்கெடு நெருங்கிவிட்டதால், வாக்காளர்களைக் குறிவைத்து கட்சிகள் இது போன்ற பிரச்சாரங்களை தீவிரமாக செய்து வருகிறது.

admin

Recent Posts

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

1 week ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

3 weeks ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

3 weeks ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

3 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

4 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

4 weeks ago