நகர சபை தேர்தல்கள்: தீவிரமடையும் தேர்தல் பிரச்சாரங்கள்

பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நகரசபை உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் பரபரப்பான முறையில் நடைபெற்று வருகிறது, இது மயிலாப்பூரில் உள்ள உள் காலனிகளில், அதிக மக்கள் தொகை கொண்ட மண்டலங்களில் தெளிவாகத் தெரிகிறது.

நேற்று மாலை, 124வது வார்டுக்கான மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் சசிகலா, மயிலாப்பூரின் மையப்பகுதியில், வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்களையும், பின்னர் குடியிருப்பாளர்களையும் சந்தித்து வாக்கு சேகரித்தார். (புகைப்படம் கீழே)

திமுகவின் மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவும் திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் மற்றும் சிபிஐ-எம் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களுக்காக பரபரப்பான மற்றும் நீண்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். (புகைப்படம் கீழே)

இந்த மண்டலத்தில் வார்டுக்கு வார்டு பிரச்சாரம் செய்துகொண்டே அவர் திறந்த வெளியில் சுற்றிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. ஒரு கட்டத்தில், அவர் ஜீப்பில், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக கட்சிகளின் தொண்டர்கள் தலைமையில், வார்டு 123 இல் சிபிஐ-எம் இன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சரஸ்வதியுடன் பிரச்சாரம் செய்தார்.

மாநிலத் தேர்தல் ஆணையம் இப்போது சிறிய ஊர்வலங்கள் மற்றும் தெருக் கூட்டங்களை நடத்த அனுமதித்துள்ளதால், மேலும் பிரச்சாரத்திற்கான காலக்கெடு நெருங்கிவிட்டதால், வாக்காளர்களைக் குறிவைத்து கட்சிகள் இது போன்ற பிரச்சாரங்களை தீவிரமாக செய்து வருகிறது.

admin

Recent Posts

ஆர். ஏ. புரத்திலுள்ள டாஸ்மாக் ‘எலைட்’ கடையை மூட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை.

ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…

2 days ago

மந்தைவெளியில் உள்ள டாஸ்மாக் மது விற்பனைக் கடை நிரந்தரமாக மூடப்பட்டது.

மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…

3 days ago

இந்த டிரை கிளீனிங் வாகனம் வீட்டு வாசலுக்கே வந்து சேவை வழங்குகிறது.

உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…

3 days ago

தயாராகி வரும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரின் புதிய அலுவலகம்.

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…

5 days ago

கிழக்கு அபிராமபுரத்தில் உள்ள இந்தகடையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மாம்பழங்கள்.

இந்தக் கோடைக்காலத்தை முன்னிட்டு, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் பண்ணைகளிலிருந்து பெறப்பட்ட, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட புதிய மாம்பழங்கள் கிழக்கு அபிராமபுரத்தில்…

6 days ago

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மாநில அமைச்சராகப் பதவியேற்பு

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கடரமணன், முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்றார். இந்தப் பதவியேற்பு விழா…

1 week ago