கிழக்கு அபிராமபுரத்தில் மழைநீர் வடிகால் பணிகளில் குளறுபடி: பொதுமக்கள் போராட்டம்

மயிலாப்பூரில் உள்ள ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தாமதமாகவும் மற்றும் தரம் தாழ்ந்து வருவதையும் கண்டித்து அப்பகுதி மக்கள் அக்டோபர் 2ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த பணியால் சாலைகள் சேறும் சகதியுமாக இருப்பதுடன், கழிவுநீர் குடிநீருடன் கலப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த தெரு மற்றும் பக்கத்து தெருவைச் சேர்ந்த ஒருசில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி

Verified by ExactMetrics